மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் இடைக்கால பட்ஜெட்டை அம்மாநிலத்தின் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான அஜித் பவார் வெள்ளிகிழமை தாக்கல் செய்தார். இதில் அவர் 2014-15ஆம் நிதியாண்டு ரூ.5,417.28 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையாக இருக்கும் என தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டு மட்டும் ரூ1,69,907.55 கோடி ரூபாயை வருவாயாக கொண்டுள்ள இந்த பட்ஜெட் அடுத்த நிதி ஆண்டிற்கான செலவுக்கான தொகையாக ரூ1,75,324.83 கோடி ரூபாயை கொண்டுள்ளது.
வரி விலக்கு
கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் மாவு, வெல்லம், மஞ்சள், புளி போன்ற பொருட்களுக்கு அடுத்த நிதி ஆண்டு வரை வரி விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
விலை மாற்றம் இல்லை
கொத்தமல்லி விதை, வெந்தயம், மிளகாய், பார்ச்லே, தேங்காய், அப்பளம், ஈரமான பேரிச்சைகள், கரென்ட்ஸ் மற்றும் திராட்சை, சோளபுரி சாத்டர்ஸ், துண்டுகள் மற்றும் தேயிலை மீது தற்போதுள்ள சலுகை விலை மார்ச் 31, 2015 வரை தொடரும் என்று அஜித் பவார் அறிவித்துள்ளார்.
இலக்கை எட்டியும் பாற்றாக்குறை
2013-14ஆம் நிதியாண்டில் சிறிய அளவிலான உபரி வருமானத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் வருவாய் இலக்கினை எட்டி விட்ட போதிலும் கூட இயற்கை பேரிடர் நிவாரணம் வழங்குதல், மின்சார கட்டணம் மானியம் வழங்குதல் உள்ளிட்ட மற்றும் பிற அவசியமான செலவுகள் மிக அதிகமாக இருந்தது என்றும், இதன் விளைவாக, உபரி வருவாய், ரூ3,017.23 கோடி பற்றாக்குறை கொண்டதாக ஆனது என்றும்.
மின்சார கட்டணம் மானியம்
இந்த வருடம் எடுக்கப்பட்டிருக்கும் முடிவால் மின்சார கட்டணம் மானியம் வழங்குதல் போன்ற பல காரணங்களால் 2014 -15ஆம் ஆண்டில் ஒரு கணிசமான தொகை செலவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். 2014-15 -க்கான மாநில வரைவு திட்டத்தை பற்றி திட்ட கமிஷனுடன் இது வரை விவாதிக்கவில்லை என்றும் நிதி அமைச்சர் கூறினார்.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தலுக்கு பிறகு அடுத்த கூட்டத்தில் மேலும் ஒரு கூடுதல் பட்ஜெட்டை அவையில் தாக்கல் செய்ய தான் உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அந்த பட்ஜெட் அடுத்த நிதியாண்டிற்கான திட்டமிடப்படாத செலவுகளையும்,திட்டத்தின் புதிய பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications