மும்பை: வெளிநாட்டு அமைப்பு முதலீட்டாளர்கள் செயத சுமார் 2,766 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு முதலீடுகள் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வரலாறு காணாத உயரங்களை எட்டியது. கடந்த 15 முதலீட்டில், வெளி நாட்டு அமைப்பு முதலீட்டாளர்கள் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (அதாவது 9500 கோடி ரூபாய்) இந்திய பங்குகளில் முதலீடு செய்தனர். 2014 ஆம் ஆண்டில் அவர்களின் நிகரக் கூட்டு முதலீடுகள் (மார்ச் 6ஆம் தேதி வரை) சுமார் 820 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூபாய் 5000 கோடிக்கும் மேல்) ஆகும்.
இந்த முதலீட்டால் சென்செக்ஸ் 406 புள்ளிகள் உயர்ந்து 21290 புள்ளிகள் வரை உயர்ந்தது, மறுபுறம் தேசிய பங்குச்சந்தை அளவான நிஃப்டி இந்த ஆண்டின் பெரிய லாபமாக 6500 புள்ளிகளைக் கடந்து 126 புள்ளிகள் உயர்ந்து 6527 புள்ளிகளில் முடிந்தது.
உயர்வை கண்ட துறைகள்
சுவாரசியமாக, விலை சார்ந்த துறைகள் இந்த உயர்விற்கு உறுதுணையாக இருந்தன. நிலம் மற்றும் கட்டுமானத்துறை, வங்கி மற்றும் முதலீட்டுச் சொத்துகள் ஆகியவை நன்கு லாபமடைந்த துறைகளாகும். இந்த துறைகளின் மதிப்பீடு முறையே 5.4, 5.35 மற்றும் 4 சதவிகித வளர்ச்சியைக் கண்டன.
ஐடி நிறுவன பங்குகள்
கடந்த மாதங்களில் நன்கு செயலாற்றிய தகவல் தொழில் நுட்பத்துறையின் (ஐடி) பங்குகள் ரூபாய் மதிப்பு வளர்ச்சி காரணமாக 2 சதவிகிதம் வரை வீழ்ச்சியைக் கண்டன.
மருத்துவம், நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள்
போட்டி அதிகம் உள்ள மருத்துவச் சேவை மற்றும் நுகர்வுப் பொருட்களின் நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்து 2 சதவிகித வீழ்ச்சியைக் கண்டன.
நிஃப்டி
கடந்த வாரம் வெள்ளிகிழமை நிஃப்டி சுறுசுறுப்புடன் துவங்கி ஒரு சாதகமான வேகத்துடன் நாள் முழுவதும் கொண்டிருந்தது. எப்போது இல்லாத அளவிற்கு உயர்ந்து 6538 புள்ளிகளை எட்டியது.
வலுமையான நிலையில் ரூபாய் மதிப்பு
பட்டியலில் வலுவான இடத்தில் இருந்தபோதும் ஐடி மற்றும் மருந்துப் பொருட்கள் துறைகள் டாலருக்கு எதிராக ரூபாய் 61 என்ற அளவில் வலுவடைந்ததன் காரணமாக நெருக்கடியைச் சந்தித்தன.
இன்றைய வர்த்தக நிலை
இன்று வர்த்தகம் சரிவு முகத்துடனே துவங்கியது, இதனால் சென்செக்ஸ் 42.17 புள்ளிகள் சரிந்து 21877.08 புள்ளிகளில் உள்ளது. மேலும் நிஃப்டி 10.45 புள்ளிகள் சரிந்து 6516.20 புள்ளிகள் அடைந்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications