ஹைதெராபாத்: இந்தியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் சுமார் 4.4 பில்லியன் டாலர் அதாவது 26,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எரிபொருள் செயல்திறன் அதிகமுடைய போயிங் 737 மேக்ஸ்8எஸ் விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது என போயிங் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் இந்தியாவின் விற்பனை பிரிவின் மூத்த துணை தலைவர் தினேஷ் கேஸ்கார் தெரிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட் மற்றும் போயிங் நிறுவனங்களும் இன்று ஹைதெராபாதில் தொடங்கியுள்ள இந்தியா விமான போக்குவரத்து நிகழ்ச்சியில் தங்களது ஒப்பந்த அறிவிப்பை தெரிவித்தாது. இந்த நிகழ்ச்சியில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவே.
சன் குழுமம்
சன் குழுமத்தின் சிஎஃப்ஒ எஸ்.எல். நாராயணன் இதுகுறித்து கூறுகையில் "ஸ்பைஸ்ஜெட் போயிங் நிறுவனத்திற்கும் இடையே பல வருடங்கலாக நல்ல நட்பு இருந்துவருகிறது. மேலும் போயிங் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் மீது எங்களுக்கு ஆபார நம்பிக்கை உள்ளது" என அவர் தெரிவித்தார்.
737 மேக்ஸ்
ஆர்டர் செய்யப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ஏற்ப பல மாறுதலுக்கும் உட்படுத்தி மெருகேற்ற உள்ளம் என போயிங் நிறுவனம் தெரிவித்தது.
1800 விமானங்கள்
போயிங் நிறுவனத்தின் சிறப்பிக்க தயாரிப்பான போயிங் 737 மேக்ஸ் விமானம் உலகின் அனைத்து வானுர்தி நிறுவனங்களுக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை. இதுவரை சுமார் 1,800 விமானங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் உற்பத்தி 2016ஆம் ஆண்டு முதல் துவங்கி 2017 ஆண்டு விநியோகம் செய்யப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்தது.
90 விமானங்கள் முன்பதிவு
இந்த முன்பதிவில் போயிங் விமான வரிசையில் 737-800, 737-900ER, 737 மேக்ஸ் உட்பட சுமார் 90 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முன்பதிவு செய்துள்ளது இதில் 31 விமானங்களை பெற்றுவிட்டது.
பங்குசந்தை
இந்த அறிவிப்புக்குப் பின் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் சுமார் 3.32 சதவீதம் உயர்ந்து 14.61 என்ற விலையில் விற்கபடுகிறது.