சென்னை: ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்தின் முதல் ஏர்பஸ் ஏ320 ரக விமான பல பிரச்சனைகளை தாண்டி கடந்த வாரம் சென்னை விமான நிலைத்தில் இறங்கியது. ஏர்ஏசியா நிறுவனம் கடந்த சில வருடங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது வந்தது. பின்பு டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் இயங்க துவங்கியது.
இந்நிலையில் இந்த கூட்டணி வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து இந்நிறுவன புதிய ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தை வாங்க முடிவு செய்தது. இதன்படி இந்த விமானம் துருக்கி வழியாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.11 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.
10 ஏர்பஸ் விமானம்
மேலும் ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் மொத்தம் 10 ஏர்பஸ் ஏ320 விமானங்களை வாங்க ஒப்புதல் பெற்றுள்ளது.
முத்தரப்பு கூட்டணி
ஏர்ஏசியா நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை அளிக்க டாடா குழுமம், மற்றும் அருண் பத்தியா தலைமை வகிக்கும் டெல்ஸ்ட்ரா டிரேடுபேலஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் உருவானது.
மலிவு விலை சேவை
மேலும் ஏர்ஏசியா இந்தியா நிறுவனம், இந்தியாவில் மலிவு விலை சேவையை வழங்குவது தலையாயக் கடமை என்று கூறியுள்ளது.
சிஈஒ
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஐரீன் ஒமார் கூறுகையில் இந்தியாவில் மார்ச் மாத கடைசியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் இந்தியாவில் தனது செயல்பாட்டை துவக்கப்படும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications