டெல்லி: உலகின் மிகப்பெரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங் நிறுவனம் மத்திய அரசிற்கு சுமார் 70 கோடி ரூபாய் வரையிலான இறக்குமதி வரியை செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது. அதை கண்டித்து இந்தியாவின் டைரக்டரேட் ஆஃப் ரெவின்யூ இன்டலிஜென்ஸ் (டிஆர்ஐ) துறை சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாம்சங் இந்தியா நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக சுமார் 460 கோடி ரூபாய் மதிப்பிலான டாப்லெட், மொபைல் ஃபோன்களை நியாயமான இறக்குமதி வரியை செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
டாப்லெட்டுகளின் இறக்குமதிக்கு சுமார் 12 சதவிகித வரி விதிக்கப்படும் அதே வேளையில், மொபைல் ஃபோன்களின் இறக்குமதிக்கு 1 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு
சாம்சங் நிறுவனம் கடந்த 2012 ஏப்ரல் மற்றும் 2013 பிப்ரவரி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் தென் கொரியாவிலிருந்து டாப்லெட்டுகளை இறக்குமதி செய்த போது, சுமார் 70 கோடி ரூபாய் வரையிலான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது.
நோட்டீஸ்
இது குறித்து கடந்த மாதம் இந்நிறுவனத்துக்கு டிஆர்ஐ நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது என்றும் அத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ரனர்.
நிறுவனத்தின் பதில்
இந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "நாங்கள் தற்சமயம் அக்குறிப்பிட்ட நோட்டீஸை ஆய்வு செய்து வருகிறோம். எங்கள் நிறுவனம் இயங்கி வரும் அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கக்கூடிய அனைத்து சட்டதிட்டங்களையும் தவறாது கடைபிடித்து வருகிறோம் என்பதை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்." என்று சாம்சங் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சட்ட நிபுணர்களின் உதவி
"சம்பந்தப்பட்ட துறையில் சிறந்து விளங்கும் சட்ட நிபுணர்களுடன் நன்கு கலந்து ஆலோசனை செய்து சாம்சங், இவ்விஷயத்தில் செயல்பட்டு வருகிறது." என்று அந்நிறுவன பிரதிநிதி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
சொத்துகளை கையகபடுத்துதல்
சாம்சங் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸில், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் அடிப்படையாகக் கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை தான் ஏன் கையகப்படுத்தக்கூடாது என்று டிஆர்ஐ கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications