துபாய்: இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம், சவுதி அரேபியாவின் முன்னணி வங்கியுடன் மென்பொருள் சேவையை அளிக்க ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம், வங்கி வாடிக்கையாளரின் விநியோகச் சேவை முறை முற்றிலும் மாறுப்பட்டதாகத இருக்கும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கிச் சேவை தளமான TCS BaNCS அவ்வங்கி செயல்படடும் தற்போதைய மென்பொருளை மாற்றம் செய்யும், மேலும் இந்த புதிய மென்பொருள் அந்நாட்டின் நேஷனல் கம்ர்ஷியல் வங்கிகளின் மொத்த வங்கி சேவையையும் மேம்படுத்த உள்ளது.
இதுமட்டும் அல்லாது வங்கிகளின் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் சேவைகளையும் மேம்படுத்த உள்ளது.
நேஷனல் கம்ர்ஷியல் வங்கியின் தலைவர் மன்சூர் அல் மைமான் கூறுகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் மென்பொருள் சேவையின் மூலம் வங்கி ஒரு புதிய வேகத்துடன் செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இன்னும் ஒரு மாதத்தில் முதல் மென்பொருளை வங்கி செயல்பாட்டில் நிறுவ உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications