சென்னை: இப்போது வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நினைத்தால் முதலில் வீட்டுக் கடன் வாங்க நினைக்கின்றோம். அப்படி வாங்கினால் நாம் வீடு வாங்கும் செலவில் சுமார் 50 சதலவீதம் முதல் 60 சதவீதம் வரை மட்டுமே வங்கி நமக்கு தருகிறது. ஆனால் நேஷ்னல் ஹவுசிங் பாங்க் தற்போது 90 சதவீதம் வரை தருகிறது.
இத்திட்டத்தை அனுபவிக்க ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான். நாம் வாங்கு வீடு 20 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
இது குறித்து நேஷ்னல் ஹவுசிங் வங்கியின் தலைவர் வர்மா கூறுகையில் "தற்போது நாங்கள் ஒரு புதிய வீட்டிற்கு அடமான உத்தரவாதத்தின் படி அந்த நபருக்கு 80 சதவீதம் வரை கடன் தருகிறோம், தற்போது இந்த அளவிட்டை மாற்றி அமைக்க உள்ளோம்." என தெரிவித்தார்.
அடமான உத்தரவாத திட்டம்
இந்த திட்டம் மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும், அடமான உத்தரவாத திட்டத்தின் படி வழங்குவதால் இத்தகைய அபத்தை சரி செய்ய முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (உங்களுக்கு ஒரு ரிஸ்கும் இல்ல, கடன் வாங்கும் எங்களுக்கு தான் ரொம்ப பெரிய ரிஸ்க்கு)
90% வரை கடன்
மக்களின் தேவையை உணர்ந்து எங்களின் அதிகபட்ச கடன் வரம்பான 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளோம். அதாவது ஒரு நபர் 1 கோடிக்கும் மதிப்புள்ள சொத்தை வாங்கினால் நாங்கள் அவர்களுக்கு 90 இலட்சம் வரை அடமான உத்தரவாதத்தின் படி கடன் வழங்குவோம்.
தவான் ஹவுசிங் பைனான்ஸ்
மேலும் இத்தகைய கடன் நிறுவனங்கள் செக்குரிட்டி என்ற பெயரில் நாம் வாங்கு கடன் தொகையில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளும். இதன் மூலம் தவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் 288 கடன் விண்ணப்பங்களின் மூலம் சுமார் 37.83 கோடி ரூபாயை பெற்றது குறிப்பிடதக்கது.
40% சேமிப்பு
இந்திய அடமான நிறுவனங்கள் நாம் வாங்கும் கடன் தொகையில் சுமார் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை செக்குரிட்டியாக பெற்றுக்கொள்கிறது. இதன் முலம் இந்திய வங்கிகள் தனது இருப்பில் 40 சதவீதம் சேர்த்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒர் உண்மை.


Click it and Unblock the Notifications