மும்பை: சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அமைப்பு அன்னிய அமைப்பு முதலீட்டாளர்கள் ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்வு காலம் உள்ள அரசுப் பத்திரங்களை வாங்க கட்டுப்பாடு விதித்துள்ளது. இது அதிக காலம் கொண்ட அன்னிய முதலீடுகளை ஈர்க்க எடுக்கப்பட்ட முடிவு என செபி தெரிவித்தது.
"அன்னிய முதலீட்டு அமைப்புகள் அல்லது தகுதிபெற்ற அன்னிய முதலீட்டாளர்கள் இனி ஒருவருடத்திற்கும் மேலான முதிர்வு காலம் உள்ள அரசுப் பத்திரங்களை மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவர்" என செபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீண்ட கால முதலீடுகள்
"அரசுப் பத்திரங்களை வாங்க அனுமதிக்கப்படும். மேலும் குறைந்த காலத்திற்கு வழங்கப்பட்ட முதலீட்டு வரையறைகள் இனி அதிக கால வரையறைகளில் வழங்கப்படும்" என மேலும் அவ்வமைப்புத் தெரிவித்தது.
30 பில்லியன் டாலர்
அன்னிய அமைப்பு முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் ஒட்டு மொத்த அரசுப் பத்திர முதலீடு வரையறை மாற்றமின்றி 30 பில்லியன் டாலர்களுக்குள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ
செபியின் இந்த அறிவிப்பு, ஆர்பிஐ-யின் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட 2014-15ஆம் ஆண்டிற்கான இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் நிதிக் கொள்கை அறிவிப்பினை அடிப்படையாகக் கொண்டது.
கடன்களைப் பெறுவதில் அன்னிய முதலீட்டு வரையறைகளை சரிசெய்யவும் விரிவுபடுத்தவும் ஆர்பிஐ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
திட்டவட்டமான முடிவுடன் அன்னிய முதலீடு
"நீண்ட கால நிதி ஆதாரங்களை ஆய்ந்தபோது, அரசுப்பத்திரங்களில் தகுதியுடைய ஒருவருடத்திற்கும் மேலான முதிர்வுடைய அனைத்து அன்னிய முதலீடுகளும் அனுமதிக்கப்படும்" என தன் முடிவை ஆர்பிஐ விளக்கியது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications