டெல்லி: மத்திய அரசின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் (என்ன சேவைன்னு கேட்ட கூடாது...) நிறுவனம் ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை துவங்கவுள்ளதாக தகவல் வந்ததுள்ளது. இது பற்றி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா இச்செய்தியை அவர் உறுதி செய்தார்.
மேலும் புதிய பல்கலைகழக்த்தை துவங்க அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) ஆகியவற்றிடம் முறையாக அனுமதி பெறப்படும் எனவும் தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனம்
இந்த பல்கலைகழகத்தில் பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை பயிற்றுவிக்க அதிநவீன வசதிகளுடன் சிறப்பாக செயலாற்ற பிஎஸ்என்எல் நிறுவனம் முனைந்துள்ளது. மேலும் சிறந்த பல்கலைகழகத்திற்கான அனைத்து தொழில்நிட்ப வசதிகளும் எங்களிடம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிநவீன மையம்
காசியாபாத்தில் இருக்கும் பிஎஸ்என்எல் மையத்தில் சுமார் 2500 மாணவர்கள் அமரும் அளவிற்கு சகல வசதிகளும் உள்ளது, இதுமட்டும் அல்லாமல் ஜபல்பூரில் மையத்தில் 3000 மாணவர்களுக்கும் போதுமான இடவசதிகள் உள்ளது.
புதிய பாடப் பிரிவு
உலகில் சைப்ர் குற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இப்பிரச்சனையை களைய இந்த பல்கலைகழகத்தில் ‘சைபர் செக்யூரிட்டி' பாடப்பிரிவு மிகவும் சிறப்பான முறையில் பயிற்றுவிக்க திட்டமிடபட்டிள்ளன.
சைபர் செக்யூரிட்டீஸ்
இந்த பாடப்பிரவு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதன் பாடப்பிரிவின் மூலம் இன்னும் சில வருடங்களில் 5 இலட்ச மாணவர்களை உருவாக்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இத்துறை இந்தியாவில் மிகவும் அவசியமான ஒன்று.
சைபர் செக்யூரிட்டி வல்லுனர்கள்
இந்த பாடப்பிரிவை திறம்பட பயிற்றுவிக்க போதுமான கட்டமைப்பும், வல்லுனர்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications