இந்திய பொருளாதாரம் நிலைபெற்றது!! சிதம்பரம் மகிழ்ச்சி..

டெல்லி: டாலருக்கும் நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வாரக்காலமாக 59.90 முதல் 60.00 ரூபாயில் இருந்து வருகிறது இதை கவணித்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் ஒரு நிலையான இடத்தை அடைந்தது. மேலும் அடுத்த சில மாதங்களுக்கு இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடு இருக்கும், மேலும் இந்தியாவிந் 23 பொது துறை நிறுவனங்கள் அடுத்த வருடத்தில் 1.33 இலட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளன.

இந்திய பொருளாதாரம் நிலைபெற்றது!! சிதம்பரம் மகிழ்ச்சி..

இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு சான்றே தற்போது இருக்கும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என தெளிவாக தெரிவித்தார். மேலும் பிற நாணயங்கள் உடன் ஒப்பிடுவது தேவைற்ற செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் உணவு பணவீக்கம் அதிகளவில் உள்ளது, இதனால் மத்திய அரசு ஒரு திறந்தவெளி சந்தை விற்பனை செயல்படுத்த உள்ளது, இதனால் உணவு பணவீக்கம் கணிசமாக குறையும் என சிதம்பரம் தெரிவித்தார்.

2013-14ஆம் ஆண்டு காலத்தில் திறந்தவெளி சந்தையின் மூலம் 16 இலட்ச டன் கோதுமை விற்கப்பட்டது, மேலும் கடந்த இரு வருடங்களாக கோதுமை மற்றும் அரிசியின் விலை இவ்வாறே கட்டுப்படுத்தபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் சிறப்பான கொள்கையின் மூலம் நாட்டின் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+