மும்பை: இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கூட வங்கி கணக்குகளைத் தொடங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விரைவில் ஒரு சிறப்பு திட்டத்தை துவக்க உள்ளதாக, பிடிஐ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'நாங்கள் குழந்தைகளுக்கான கணக்குகளைத் துவக்கினாலும், வரைவோலைகளை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன, நாங்கள் வரைவோலைகளை மாற்றிக் கொள்வதில்லை. எனினும், வங்கிகளில் பணம் டெப்பாசிட் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அடுத்த மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்கென ஒரு சிறப்புத் திட்டத்தை நாங்கள் துவக்கப் போகிறோம்', என்று SBI-ன் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
ப்ளோட்டிங்-ரேட் கடன்கள்
ப்ளோட்டிங்-ரேட் கடன்களை முன்கூட்டியே செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதங்களை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதினால், இலாபங்களில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. நிலையான வட்டி விகிதம் கொண்ட கடன்களுக்கு வங்கிகள் முன்கூட்டியே கடனை முடிப்பதற்கு கட்டணம் விதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கி சேவை
10 வயதுக்கும் மேற்பட்டவர்களும் சேமிப்பு கணக்குகளை தனியாகத் தொடங்கலாம், மேலும் ஏ.டி.எம் மற்றும் காசோலை வசதிகளைப் பயன்படுத்தலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்கிழமையன்று தெரிவித்தது குறிப்பிடதக்கது.
மைனர் வங்கி கணக்கு
முன்னதாக மைனர்கள் நிலையான வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்குகளை துவக்கும் போது அவர்களுடைய தாயார்களை பாதுகாப்பாளராக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பான வங்கி சேவை
'இணைய வழி வங்கி சேவைகள், ஏ.டி.எம்/டெபிட் கார்டு, செக் புக் வசதி போன்றவற்றை வழங்குவதில் வங்கிகள் சுயமாக முடிவெடுக்கலம். இது மைனர்களின் கணக்குகளை பாதுகாக்கும் பொருட்டாக ஓவர்ட்ராப்டுகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அது எப்பொழுதும் வரவிலேயே இருக்கும்', என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications