மும்பை: இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கூட வங்கி கணக்குகளைத் தொடங்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி விரைவில் ஒரு சிறப்பு திட்டத்தை துவக்க உள்ளதாக, பிடிஐ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'நாங்கள் குழந்தைகளுக்கான கணக்குகளைத் துவக்கினாலும், வரைவோலைகளை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன, நாங்கள் வரைவோலைகளை மாற்றிக் கொள்வதில்லை. எனினும், வங்கிகளில் பணம் டெப்பாசிட் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அடுத்த மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்கென ஒரு சிறப்புத் திட்டத்தை நாங்கள் துவக்கப் போகிறோம்', என்று SBI-ன் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
ப்ளோட்டிங்-ரேட் கடன்கள்
ப்ளோட்டிங்-ரேட் கடன்களை முன்கூட்டியே செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதங்களை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதினால், இலாபங்களில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. நிலையான வட்டி விகிதம் கொண்ட கடன்களுக்கு வங்கிகள் முன்கூட்டியே கடனை முடிப்பதற்கு கட்டணம் விதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கி சேவை
10 வயதுக்கும் மேற்பட்டவர்களும் சேமிப்பு கணக்குகளை தனியாகத் தொடங்கலாம், மேலும் ஏ.டி.எம் மற்றும் காசோலை வசதிகளைப் பயன்படுத்தலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்கிழமையன்று தெரிவித்தது குறிப்பிடதக்கது.
மைனர் வங்கி கணக்கு
முன்னதாக மைனர்கள் நிலையான வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்குகளை துவக்கும் போது அவர்களுடைய தாயார்களை பாதுகாப்பாளராக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பான வங்கி சேவை
'இணைய வழி வங்கி சேவைகள், ஏ.டி.எம்/டெபிட் கார்டு, செக் புக் வசதி போன்றவற்றை வழங்குவதில் வங்கிகள் சுயமாக முடிவெடுக்கலம். இது மைனர்களின் கணக்குகளை பாதுகாக்கும் பொருட்டாக ஓவர்ட்ராப்டுகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அது எப்பொழுதும் வரவிலேயே இருக்கும்', என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications