டெல்லி: இந்தியாவில் மிகவும் பரபரப்புடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல், ஆணையம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையம் நடத்திய வாகனம் மற்றும் இதர சோதனைகளில் கணக்கில் வராத சுமார் 331 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தவிர 225 லட்சம் லிட்டர் மதுபானங்களும், 1.85 இலட்சம் கிலோ போதைப் பொருள்களும் சிக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதைப்பற்றி முழு விவரங்களை இப்போது பார்போம்.
பணப் பறிமுதல்
வாகனம், தேர்தல் தொகுதிகள் மற்றும் இதர இடங்களில் செய்த சோதனையில் 153 கோடி பணப் பறிமுதலில் செய்யப்பட்டு ஆந்திரா முதலிடத்தையும், 28 கோடியுடன் கர்நாடகா இரண்டாவது இடத்தையும், அவற்றைப் பின்தொடர்ந்து மஹாராஷ்டிரா (25.67 கோடி), பஞ்சாப் (12.99 கோடி), தமிழ்நாடு (25.05) மற்றும் உத்திரப்பிரதேசம் (24.07 கோடி) ஆகிய மாநிலங்கள் பிற இடங்களையும் பிடித்தன.
சரக்கு
நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்லாமல் இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தல் ஆக இருந்தாலும் சரி மதுபானங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. மதுபானங்கள் பறிமுதல் பட்டியலில் மீண்டும் ஆந்திராவில் 1.44 லட்சம் லிட்டர்களும், பஞ்சாபில் 11.50 லட்சம் லிட்டர்களும், குஜராத்தில் 11.32 லட்சம் லிட்டர்களும், மேற்கு வங்கத்தில் 8.25 லட்சம் லிட்டர்களும் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் 7.25 லட்சத்து லிட்டர்களும் பிடிபட்டன.
போதைப்பொருள்
போதைப்பொருள் பறிமுதலில் பஞ்சாப் 1.39 லட்சம் கிலோ என்ற அளவுடன் முதலிடத்தையும், உத்திரப்பிரதேசம் 24,000 கிலோவுடனும் ராஜஸ்தான் 10,000 கிலோவுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
வழக்குகள்
இதுவரை இந்தியாவில் தேர்தல் ஆணைத்தின் சோதனையின் மூலம் மொத்தமாக 13,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 20,349 பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் தேர்தலின் போது பணியில் ஈடுபட்டனர். இவை அனைத்தும் கணக்கில் காட்டப்பட்டவை மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications