மும்பை: இந்தியவின் பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து வங்கி பணியாளர்கள் வருகிற மே 23ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் செய்ய உள்ளனர் இதனால் வெள்ளிக்கிழமை வங்கி செயல்பாடு முற்றிலும் முடங்க உள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் தலைவரான பி.ஜே.நாயக் தலைமை வகிக்கும் ரிசர்வ் வங்கியின் ஒரு குழுவின் பரிந்துரையின்படி, அரசு, பொது துறை வங்கிளில் வைத்திருக்கும் பங்கு இருப்பை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கும்படி கடந்த வாரம் மத்திய அரசிற்கு ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது.
எதிர்ப்பு
இம்முடிவை எதிர்த்து இந்தியாவின் 5 வங்கி கூட்டமைப்புக்களில் இருக்கும் 10 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் பணியாளர்கள் மே 23ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பரிந்துறையின் விளைவு
பி.ஜே.நாயக் அவர்களின் பரிந்துரை இந்திய பொது துறை வங்கிகளின் பிம்பத்தை முற்றிலும் மாற்றி அமைத்து விடும் என மகாராஷ்டிர ஸ்டேட் பாங்க் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் விஷ்வாஷ் உத்தகி தெரிவித்தார்.
எதிர்ப்பிற்கு என்ன காரணம்??
பொது துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் இவர்களின் வேலைக்கான உத்திரவாதம் குறைந்து விடும், எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஐடி துறையை போல் மாறிவிடும். மேலும் இவர்களுக்கு வேலை பளு கண்டிப்பாக அதிகரிக்கும், இதனால் இவர்களின் சுகவாசியான வாழ்க்கை பரிபோகும்.
மக்களுக்கும் என்ன பாதிப்பு
பொது வங்கிகள் (அரசு வங்கிகள்) என்ற காரணத்தினால் நாம் நம் பணத்தை எந்தவித சலனமும் இன்றி வங்கிகளில் முதலீடு செய்து வருகிறோம், தனியார்மையமாக்கப்பட்டால் இத்தகைய வங்கிளின் பாதுகாப்பு கண்டிப்பாக குறையும். மேலும் வங்கி சேவை கட்டணங்கள் தனியார் வங்கிகளை விட தற்போது குறைவாக உள்ள, இந்த பரிந்துறை ஒப்புதல் பெற்றால் இக்கட்டணங்களும் உயரும்.
கூட்டமைப்புகள்
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 கூட்டமைப்புகள், அனைத்து இந்தியா வங்கி கழகம் (AIBEA), அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கழகம் (AIBOA), வங்கி ஊழியர்களின் இந்திய கூட்டமைப்பு (BEFI), இந்தியன் நேஷ்னல் பாங்க் எம்பிலாயிஸ் பெடரேஷன் (INBEF), இந்தியன் நேஷ்னல் பாங்க் ஆபிசர்ஸ் காங்கிரஸ் (INBOC) ஆகிய கூட்டமைப்புகள் இணைந்து மே23ஆம் தேதி போராட்டத்தில் இறங்க உள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications