பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து எத்தனை உயர் அதிகாரிகள் வெளியே சென்றாலும் நிறுவன பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடந்த அதிகாரிகள் உள்ளனர் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்து வெளியேறிய நாராணயன மூர்த்தி கடந்த ஜூன் மாதம் நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்தார். இவரின் வருகையை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தின் 11 உயர் மற்றும் முக்கிய அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையாக பாதிப்பு அடைந்தது. மேலும் சில பங்குசந்தை முதலீட்டு நிறுவனங்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் மதிப்பு குறைத்தது.
புதிய சீஇஓ
பல பிரச்சனைகள், குழப்பங்கள் மத்தியில் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓவாக, எஸ்.ஏ.பி நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான விஷால் சிக்காவை நியமித்தது இன்போசிஸ்.
நாராயண மூர்த்தி
சனிக்கிழமை நடத்த கூட்டத்துடன் இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்து பொருப்புகளில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்தார், மேலும் இக்கூட்டத்தில் நாராயண மூர்த்தி பேசுகையில் "நிறுவனத்தில் இருந்து இனி எத்தனை உயர் அதிகாரிகள் வெளியேறினாலும் நிறுவனத்தை செவ்வன செயல்படும் அதிகாரிகள் உள்ளனர் என அவர் தெரிவித்தார்."
ரோஹன் மூர்த்தி
நாராயண மூர்த்தி கடந்த ஜூன் மாதம் நிறுவனத்திற்கு வரும்போது தனது மகன் ரோஹன் மூர்த்தி அவர்களை நிர்வாக உதவியாளர் பதவியை கொடுத்தார். இப்போது தந்தையுடன் தானும் விலகுவதாக அவர் அறிவித்தார். இவரது கடைசி வேலைநாள் இன்று (திங்கட்கிழமை).
ஊழியர்கள்
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ஒய்வு மற்றும் பணி விலகும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மார்ச மாத முடிவில் இதன் அளவீடு 2.4 சதவீதம் உயர்ந்து 18.7 சதவீதமாக உள்ளது. தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 160,000 என்பது குறிப்பிடதக்கது.
திறன் குறைந்த அதிகாரிகள்
மேலும் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அதிகாரிகளில் பலர் திறனற்றவர்கள் என நிர்வாகம் மற்றும் வெளி ஆய்வு நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளதாகவும் மூர்த்தி தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications