டெல்லி: இந்திய சந்தை மட்டும் அல்லாமல் உலக சந்தைகளும் கடந்த சில நாட்களாக மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈராக்கில் நடக்கும் பிரச்சனைகள் தான். இதனால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க துவங்கியது. இதனால் மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்த்த தயராக உள்ளது.
செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தான் ஈராக் பிரச்சனையை மிகவும் கூர்ந்து கவனித்து வருவதாகவும், இதனால் இந்திய சந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை எப்படி எதிர்ப்பது என கணித்து வருவதாகவும் அவர்தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம்
மேலும் இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ள காரணத்தினால் ஈராக் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஒரு வருட முன்பு உள்ள நிலையில் தற்போது இந்திய பொருளாதாரம் இருந்திருந்தால் நிச்சயமாக பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதை மறுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
அன்னிய செலவானி
இதுமட்டும் அல்லாமல் அன்னிய செலவானி அதிகளவில் இருப்பதாலும், பணவீக்கும் கட்டுக்குள் இருப்பதாலும் வெளி சந்தைகள் பற்றி நாம் பெரிதும் கவலை பட தேவையில்லை என ராஜன் அன்னிய செலவானியின் பலத்தை குறிப்பிட்டு, நமது பொருளாதார பலத்தை தெரிவித்தார்.
கச்சா எண்ணெய்
ஈராக் பிரச்சனையில், இந்தியா வெளிநாடுகளை அதிகம் நம்பி இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து நாம் அனைவரும் தெரிந்த ஒன்று, டாலர் இருப்பு அதிகளவில் உள்ளதால் இந்த இக்கட்டான நிலையை நம்மால் சமாளிக்க முடிகிறது. மேலும் அடுத்த ஒரு மாதகாலத்திற்கு இதே நிலை தொடர்ந்தால் இந்திய பொருளாதாரம் கண்டிப்பாக பாதிக்கும்.
மாற்று எரிபொருள்
இந்த கச்சா எண்ணெய் உபயோகத்தை குறைக்க மாற்றும் எரிபொருள் அல்லது எரிசக்தியை இந்தியா உருவாக்கும் வரை இத்தகைய பிரச்சனைகளை நாம் சமாளித்து தான் ஆக வேண்டும் வேறு வழிக்கிடையாது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications