டெல்லி: இந்திய சந்தை மட்டும் அல்லாமல் உலக சந்தைகளும் கடந்த சில நாட்களாக மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈராக்கில் நடக்கும் பிரச்சனைகள் தான். இதனால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க துவங்கியது. இதனால் மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்த்த தயராக உள்ளது.
செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தான் ஈராக் பிரச்சனையை மிகவும் கூர்ந்து கவனித்து வருவதாகவும், இதனால் இந்திய சந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை எப்படி எதிர்ப்பது என கணித்து வருவதாகவும் அவர்தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம்
மேலும் இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ள காரணத்தினால் ஈராக் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஒரு வருட முன்பு உள்ள நிலையில் தற்போது இந்திய பொருளாதாரம் இருந்திருந்தால் நிச்சயமாக பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதை மறுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
அன்னிய செலவானி
இதுமட்டும் அல்லாமல் அன்னிய செலவானி அதிகளவில் இருப்பதாலும், பணவீக்கும் கட்டுக்குள் இருப்பதாலும் வெளி சந்தைகள் பற்றி நாம் பெரிதும் கவலை பட தேவையில்லை என ராஜன் அன்னிய செலவானியின் பலத்தை குறிப்பிட்டு, நமது பொருளாதார பலத்தை தெரிவித்தார்.
கச்சா எண்ணெய்
ஈராக் பிரச்சனையில், இந்தியா வெளிநாடுகளை அதிகம் நம்பி இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து நாம் அனைவரும் தெரிந்த ஒன்று, டாலர் இருப்பு அதிகளவில் உள்ளதால் இந்த இக்கட்டான நிலையை நம்மால் சமாளிக்க முடிகிறது. மேலும் அடுத்த ஒரு மாதகாலத்திற்கு இதே நிலை தொடர்ந்தால் இந்திய பொருளாதாரம் கண்டிப்பாக பாதிக்கும்.
மாற்று எரிபொருள்
இந்த கச்சா எண்ணெய் உபயோகத்தை குறைக்க மாற்றும் எரிபொருள் அல்லது எரிசக்தியை இந்தியா உருவாக்கும் வரை இத்தகைய பிரச்சனைகளை நாம் சமாளித்து தான் ஆக வேண்டும் வேறு வழிக்கிடையாது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications