டெல்லி: இந்திய ரயில்வே துறையில் ரயில் கட்டணங்களை உயர்த்துவது குறித்தும், அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை குறித்த முடிவுகளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே முடிவு செய்ய உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரயில் கட்டணங்களை உயர்த்துவது உறுதியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்த ஆலோசனைகள் நடந்து முடிந்துள்ளது, விரைவில் இதற்கான முடிவுகளை எடிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். மேலும் இதுகுறித்த கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கூடிய வரைவில் கலந்து ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடி
இந்திய ரயில்வே துறை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதை சமாளிக்கா இரண்டு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது, ஒன்று சரக்கு மற்றும் பயணக் கட்டணத்தை உயர்த்துவது, மற்றொரு வழி அன்னிய முதலீடு.
கட்டணங்கள் உயர்வு
இந்நிலையில் பயணக் கட்டத்தை 14.2 சதவீதம் அதிகரிக்கவும், சரக்கு கட்டணங்களை 6.5 சதவீதம் அதிகரிக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அன்னிய முதலீக்கான அனுமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே பட்ஜெட்
மேலும் ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிட போவதாக தெரிகிறது.
அன்னிய முதலீடு
தற்போதைய நிலையில் ரயில்வே துறைக்கு அன்னிய முதலீட்டிற்கான அனுமதி மிகவும் அவசியமானது. மேலும் தற்போது செயல்பட்டுத்தி கொண்டு வரும் திட்டத்தை முழுமையாக, வரைவாகவும் முடிக்க அன்னிய முதலீடு மிகவும் அவசியம். அது குறித்து வர்த்தக அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களுடன் ஆலோசித்து வருவதாக திரு.கவுடா தெரிவித்தார்.
வளர்ச்சி
அதிகப்படியான அன்னிய முதலீட்டு உடன் அதிவேக ரியல், ரயில் நிலையம் மேம்பாடு, ஆகிய பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.