பெங்களுரூ: இந்திய சாப்ட்வேர் துறையில் முகவும் வேகமாக வளரந்து வரும் நிறுவனங்களில் ஒன்று விப்ரோ. இந்நிறுவன தகவல்படி விப்ரோ நிறுவனத்தின் 10 தலைவர்களில் 3 தலைவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக வியாழக்கிழமை இந்நிறுவனம் தெரிவித்தது. இதனால் இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பி.சி.பிரபாகரன், ஷியாம் சரண் மற்றும் ஹென்னிங் காகர்மான் ஆகியோர் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர்.
மூவர்
பி.சி.பிரபாகரன் விப்ரோ நிறுவனத்தில் சுமார் 17 வருடங்களாக, பணியாற்றி வருகிறார், ஷியாம் சரண் 14 வருடமாக பணியாற்றி வருகிறார், இதில் ஹென்னிங் காகர்மான் மட்டுமே குறைவாக 5 அண்டுகள் பணியாற்றி வருகிறார். வழக்கும் போல இவர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்தனர்.
ஜூலை 23
இதில் பி.சி.பிரபாகரன், ஷியாம் சரண் வருகிற ஜூலை 23ஆம் தேதி நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக இந்நிறுவனத்தின் வருடாந்திர கூட்ட அறிவிப்பில் தெரிவித்தனர். அதே நாளில் இந்நிறுவனத்தில் புதிய 7 தலைவர்களை நியமிக்கப்போவதாகவும் விப்ரோ அறிவித்ததுள்ளது.
அசிம் பிரேம்ஜி
இந்நிறுவனத்தின் உயர் தலைவரான அசிம் பிரேம்ஜி மூவரின் கணக்கில் அடங்கா பணிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறோன் என அவர் தெரிவித்தார்.
விப்ரோ
இந்நிறுவன பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் சமார் 80 சதவீத அளவிற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது, இந்நிலையில் தர்போது இந்நிறுவனத்தின் பங்கு 539.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.