பெங்களுரூ: கடந்த 2 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் உற்பத்திக் குறைவு மற்றும் விற்பனை மந்தம் காரணமாக சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்பை இத்துறை இழந்துள்ளது.
பெங்களூர் வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 37வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் பேசுகையில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
வாகனத் துறையில் 2.9 கோடி பேர்
வாகனத் தயாரிப்புக்குத் தேவையான இரும்புத் தாது சுரங்கங்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரை இத்துறையில் சுமார் 2.9 கோடி பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
30 லட்சம் பேருக்கு வேலை காலி
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வாகன உற்பத்தியின் வளர்ச்சி குறைந்து, வணிக வாகனங்களின் விற்பனையும் குறைந்துள்ளது. இதையடுத்து இத்துறையில் சுமார் 10 சதவீதம் பேர் வேலைவாய்ப்புகள் பாதிப்பு அடைந்துள்ளது.
தடைக்கல்
இத்துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்பு பாதிப்படைந்ததுள்ளது சாதாரண விஷயம் இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு முக்கியத் தடைக்கல் ஆகிவிட்டது.
முக்கியத்துவம்
நாட்டிலுள்ள தயாரிப்புத் துறைகளில் வாகனத் தயாரிப்புத் துறைதான் முக்கியமானது. அது மட்டுமல்ல, ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் கூட அது முக்கியப் பங்களிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வாகனங்களின் இயக்கம் இல்லாவிட்டால் எதுவும் இயங்காது, உலகம் முழுவது ஸ்தம்பித்து போய்விடும்.
தொழிற்சாலைகள் கவனிக்கப்படவில்லை
கொள்கை ரீதியாக மார்க்கெட் இந்தியா, தொழிற்சாலை இந்தியா என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், மார்க்கெட் இந்தியாவை நன்றாகக் கவனிக்கும் அளவுக்கு, தொழிற்சாலை இந்தியா கவனிக்கப்படவில்லை என்று தான் தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications