டெல்லி: இந்திய வங்கி கூட்டமைப்பு (IBA) நகர வங்கி வாடிக்கையாளர் தங்களது வங்கிகள் அல்லாது பிற வங்கிகளில் பயன்படுத்தும் ஏடிஎம் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தும் படி இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்0கியிடம் நகரங்களில் சொந்த வங்கிகள் அல்லாது பிற வங்கிகளில் பயன்படுத்தும் ஏடிஎம் சேவைக்கு 5 முறைக்கு மேல் ஒவ்வொரு முறையும் சேவை கட்டணத்தை வசூலிக்கும் படி கேட்டு கொண்டுள்ளது. அதேபோல் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பயன்பாட்டிற்கு கட்டணத்தை தவிர்த்துள்ளதாக ஐபிஏ தலைமை அதிகாரியான எம்.வி, தாங்சேல் பிடிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
கட்டண உயர்வு
தற்போது மாதத்திற்கு குறைந்தது 5 முறை பிற வங்கி ஏடிஎம்களில் ஏடிஎம் அட்டையை பயன்படுத்திக் கொள்ளவும், அதன் பின் ஒவ்வொரு சேவைக்கும் 20 ரூபாய் வசூலிக்கப்படும் வேண்டும் என இக்கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
செலவுகள் அதிகமானது
கடந்த வருடம் நவம்பர் மாதம் பெங்களுரில் நடந்த சம்பவத்தை அடுத்து ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, அதனால் வங்கிகளின் செலவுகள் அதிகமானது. இப்பிரச்சனையை களையும் வகையில் சேவை கட்டணத்தை உயர்த்த ஐபிஏ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பாதுகாப்புக்கான கட்டணங்கள்
இத்தகைய பாதுகாப்பு சேவைகளை அதிகப்படுத்தியுள்ளதால் ஒவ்வொரு ஏடிஎம் மையங்களின் மாத செலவுகள் ரூ. 40,000 வரை உயர்ந்துள்ளது. அதனை ஈடுகட்ட வங்கிகள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
பொது துறை வங்கிகள்
இந்தியாவில் பொது துறை வங்கிகள் மொத்தம் 72,340 கிளைகள் உள்ளது, அதில் 37,672 வங்கி கிளைகளில் ஏடிஎம் வசதி உடையது என்பது குறிப்பிடதக்கது.