டெல்லி: மத்திய அரசு இந்திய விமான துறையில் தனியார் நிறுவனத்திற்கு இடமளித்ததை தொடர்ந்து ரூ.13,000 கோடி மதிப்புள்ள ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்திய விமான படைக்கு 56 புதிய போக்குவரத்து விமானங்கள் பெற இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் முந்தைய அரசின் கனரக தொழிற்சாலைகள் & பொது நிறுவன அமைச்சர் பிரபுல் பட்டேல் மற்றும் சில முக்கிய அமைச்சர்களின் எதிர்ப்பால் இந்த திட்டம் கிடப்பில் போடபட்டது. அதை இப்போது மோடி தலைமையிலான அரசு துசி தட்டி வருகிறது.
அருண் ஜேட்லி
இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரான அருண் ஜேட்லி வரும் ஜூலை 19ஆம் தேதி புதிய விமானங்களை வாங்குவதற்கான ஏல அறிக்கையை சமர்பிக்க காலகெடுவை உயர்த்துள்ளார். மேலும் இதற்கான முக்கிய முடிவுகள் அனைத்து ஏற்கனவே எடுக்கப்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16 மட்டுமே இறக்குமதி.. அப்ப மீதமுள்ளவை??
இந்த 56 விமானங்களில் 16 விமானங்கள் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இற்குமதி செய்யப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் பாதுகாப்புத் துறை தெவித்துள்ளபது. இந்த 56 விமானங்களும் இந்திய விமான படையில் இருக்கும் பழைய விமானத்திற்கு பதிலாக வருபவை.
ஏலம்
இந்த 56 விமானங்களை ஏல முறையில் வாங்க பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக எம்பரார், லாக்ஹீட் மார்ட்டீன், ஏர்பஸ், இல்யஸின், கஸா, சாப், அலீநியா, ஏரோநாட்டிகா மற்றும் எஸ்.டி.ஈ உக்ரேன் என 10 விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏல படிவங்களை சமர்ப்பித்துள்ளது.
முதல் நிறுவனங்கள்
பாதுகாப்பு துறையில் இந்தியாவில் முதன் முதலில் காலடி வைக்கு தனியார் நிறுவனங்கள் இந்திய சந்தை மிகவும் சவாலானதாக மட்டுமே இருக்கும், இதில் தயாரிப்பு துறை அனைத்து பொதுத்துறை கட்டுப்பாட்டுகுள் இருக்கும்.
ஆயுத இறக்குமதி
மேலும் இந்திய ராணுவம், கப்பல் படை, மற்றும் விமான படைக்கான உபகரனகள், சாதனைகளில் 65 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் அதிகளவில் இறக்குமதிக்காக மட்டுமே செலவிட வேண்டியுள்ளது. இதனை களையவும், இந்திய பாதுகாப்பை அதிகரிக்கவவே இந்த முயற்சி என மத்திய அரசு தெரிவிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications