டெல்லி: இந்திய விசாயத்திற்கு இந்த வருடம் மோசமான வருடம் என்று சொன்னால் மிகையாகாது, இதற்கு முக்கிய காரணம் பருவ மழை தான். பருவ மழை பாதிப்பால் இந்தியாவில் காரீப் காலத்தில் தாணியங்களின் வளைச்சல் கணிசமாக குறைந்தது. இதனால் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்த பருப்பு மற்றும் தாணியங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த இறக்குமதியின் மூலம் இந்தியாவில் தாணிய கட்டுப்பாட்டையும், விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும். இறக்குமதி செய்வதால் விலையேற்றத்தை குறைக்க முடியும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு ஏற்றுமதியை குறைத்தாலும் விலையேற்றம் குறையும். இந்தியாவில் இருந்து அதிகளவில் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாலேயே உணவு பொருட்களின் விலை உயருகிறது.
கனடா
இதே காலகட்டத்தில் கனடாவின் சஸ்காச்சுவான் பகுதியில் பருப்பு மற்றும் பட்டாணியின் விளைச்சல் அமோகமாக இருந்தது. குறிப்பிடதக்கது. இதனால் இந்தியாவில் இதன் விலையை கட்டுப்படுத்த கனடாவில் இருந்து பருப்பு மற்றும் பட்டாணியா இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரம்ஜான் - தீபாவளி
ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கனடாவில் இருந்து குறைவான விலையில் பயிர்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த இறக்குமதி ரம்ஜான் பின்பு துவங்கி தீபாவளி வரை நடக்கும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கோதுமை ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2013-14ஆம் ஆண்டில் சுமார் 9261.60 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அதிகளவில் பங்களாதேஷ் 3171.25 கோடி ரூபாய் பதிப்பிலான கோதுமை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
பாஸ்மதி அரிசி
இந்தியாவில் இருந்து 2013-14ஆம் ஆண்டு காலத்தில் சுமார் 29,299.96 கோடி மதிப்பிலான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2012-13ஆம் ஆண்டு காலத்தில் 19,409.38 கோடி ரூபாய் மதிப்பிலான பாஸ்மதி அரிசி மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பருப்பு வகைகள்
இதே 2013-14ஆம் ஆண்டில் 1,746.34 கோடி மதிப்பிலான பருப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பீர் ஏற்றுமதி
உணவு பொருட்களில் மதுவும் அடங்கும், அந்த வகையில் 2013-14ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு 19,245.80 கோடி ரூபாய் மதிப்பிலான பீர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
காய்கறிகள்
2012-13ஆம் ஆண்டை விட 2013-14ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகளவிலான காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் காய்கறியில் விலையேற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம். இதனால் மத்திய அரசிற்கு உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி வரியை அதிகரித்துள்ளது.
தக்காளி
கடந்த 2 நிதியாண்டுகளில் இந்தியாவில் இருந்து தக்காளியின் ஏற்றுமதி சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெங்காயம்
தக்காளியை போல் வெங்காயமும் கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணமாக தெரிகிறது.
உணவு பணவீக்கம்
கடந்த ஒரு வருடத்தில் சில்லறை பணவீக்கம் 9.87 சதவீதத்தில் இருந்து 7.31 சதவீதமாக குறைந்துள்ளது.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?



Click it and Unblock the Notifications