டெல்லி: இந்தியாவில் டெமிட் மற்றும் கிரேடிட் கார்டு பயன்பாடுத்தும் போது அதன் உரிமையார்கள் இனி கவனமாக இருக்க வேண்டும். இந்திய வங்கி அமைப்பில் குறிப்பாக ஸ்வைபிங் மெஷின்களில் கார்டின் எண் மற்றும் பாஸ்வேர்டை திருடும் புதிய வைரஸ் பரவி உள்ளதாக சிஈஆர்டி-இன் தெரிவித்துள்ளது.
இந்த வைர்ஸ் பாட்நெட் குடும்பத்தை சார்ந்தது, இந்தத வைரஸ் ஆன்லைன் பயன்பாட்டில் நமது கிரேடிட் கார்டின் விபரங்களை எடுத்துக்கொள்ளும். மேலும் இந்த வைரஸை "புரூட்-பீ.ஒ.எஸ்" என்று அழைக்கப்படுவதாக சிஈஆர்டி-இன் கூறுகிறது. சிஈஆர்டி-இன் இந்தியாவில் ஆன்லைன் தகவல் திருட்டை தடுக்கும் ஒர் பிரிவு.
"புரூட்-பீ.ஒ.எஸ்"
இந்த வைரஸ் இந்தியாவில் point of sales எனப்படும் ஸ்வைப்பிங் மெஷினில் மிகவும் வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக வின்டோஸ் தளத்தை கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்வைப்பிங் மெஷினை அதிகாளவிலும் சுலபமாகவும் தாக்குகிறது.
மற்ற வைரஸ்
இந்த "புரூட்-பீ.ஒ.எஸ்" வைரஸ் தாக்குவதன் மூலம் மற்ற வைரஸும் ஸ்வைப்பிக் மெஷினில் தாக்கக்கிறது. இதனால் மொத்த நெட்வொர்க்கும் பாதிப்புக்குள்ளாகிறது. அதுமட்டும் அல்லாது இதர வைரஸ் வகைகளும் "புரூட்-பீ.ஒ.எஸ்" வைரஸை தரவிறக்கும் செய்யவும் உதவுகிறது.
திருட்டுகள்
ஒரு முறை இந்த கார்டின் தகவல்களை திருட்டு போனால் போது எப்போது வோண்டும் ஆனாலும் அதனை பயன்படுத்தி அந்த கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதனால் கிரேடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்தும் போது ரொம்ப உசார இருக்கனும் அண்ணாத்த..
ரிசர்வ் வங்கி
இத்தகைய திருட்டுகள் தவிர்க்கவே ரிசர்வ் வங்கி கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது அதன் கவுடச்சொல்லை பதவு செய்வதை கட்டாயமாக்கியது.