மும்பை: மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தக துவக்கத்திலேயே சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து தொடர்ந்து உச்சத்தை பெற்று இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நாளை வெளிவர ரிசர்வ் வங்கியின் நிதியியல் கொள்கை மற்றும் ஆகிய சந்தைகளில் வலுவான வர்த்தகம் தான்.
கடந்த 11 மாதங்களில் ரிசர்வ் வங்கி 5 முறை நிதியியல் கொள்கை வெளியிட்டுள்ளது இதில் 4 முறை பங்கு சந்தை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ஒரு முறை மட்டும் பங்கு வர்த்தகம் சரிவை தளுவியது. அதேபோல் இன்று பங்கு சந்தை மிகவும் சிறப்பாக 242 புள்ளிகள் உயர்வை சந்தித்தது.
(Read: Syndicate Bank shares slump 7 per cent as Chairman arrested for taking bribe)
நிதியியல் கொள்கை
இந்தியாவின் முக்கிய வங்கி அதிகாரிகள் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடும் நிதியியல் கொள்கையில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என தெரிவித்தனர்.
பங்கு சந்தை
இன்று மும்பை பங்கு சந்தையில் 242 புள்ளிகள் உயர்ந்து 25723.16 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த வர்த்தகத்தில் அதிகப்படியாக 25,754.42 புள்ளிகளும், குறைவாக 25,531.38 புள்ளிகளை அடைந்துள்ளது.
லாபத்தை சந்தித்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் கிராம்டன் கிரீவ்ஸ், டைடன், அப்பல்லோ டையர்ஸ், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் அதிகாப்படியான லாபத்தை சந்தித்துள்ளது.
நஷ்டம் அடைந்தவர்கள்
சிண்டிக்கேட் வங்கி, பைனான்சியல் டெக், பூஷன் ஸ்டீல், பிரட்டாணிய இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோ நெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து.
அதிகப்படியான வர்த்தகம்
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ, இன்போசிஸ், ரிலையன்ஸ் கேப்பிடல், மற்றும் எல் & டி ஆகிய நிறுவனங்களின பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டவை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications