ஒடிசா: இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒடிசா ஆலை உற்பத்தி பொருட்கள் பற்றாக்குறையின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சுரங்க உரிமம் இடைநிறுத்ததால் இந்த உற்பத்தி ஆலைக்கு தேவையான உற்பத்தி பொருட்கள் தடைப்பட்டுபோனது இதனால் இந்த ஆலை முற்றிலும் செயல் இழந்துபோனது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பாம்நிபால் ஆலைக்கு தனது சுக்கின்தா சுரங்கத்தில் இருந்து வருடத்திற்கு 50,000 டன் தாதுப்பெருட்கள் கிடைத்து வந்தது. இந்த சுரங்கத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் கடந்த மே மாதம் முதல் பாம்நிபால் ஆலை செயலிழந்துள்ளது.
60,000 பணியாட்கள்
ஒடிசா ஆலை மூடப்பட்டதால் இங்கு பணிபுரியும் சுமார் 6,000 பணியாட்களுக்கும் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சுரங்கத்திற்கான உரிமம் தரப்படாததால் மத்திய அரசிற்கு சுமார் 300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற ஒப்புதல்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சுக்கின்தா சுரங்கத்திற்கான உரிமம் காலம் கடந்த 2013ஆம் ஆண்டு அன்றே முடிந்ததுள்ளது, சில சட்ட சிக்கலின் காரணமாக உரிமம் புதுப்பிப்பு செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை.
5 நிறுவனங்கள் வழக்கு
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்த சுரங்க உரிமம் புதுப்பித்தலுக்கு எதிராக சுமார் 5 நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
உரிமம்
நீதிமன்றம் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சுரங்க உரிமம் வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் 60,000 பணியாளர்களின் (60,000 குடும்பங்கள்) நிலை மிகவும் மோசமாகிவிடும்.