டெல்லி: கறுப்பு பணத்தை கவனிப்பதற்கான சிறப்பு விசாரணைக் குழுவை (Special Investigation Team) உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இதன் பின்னர், இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டு முகவர்களுக்கு வழங்கப்படும் பணம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று மத்திய புலனாய்வு நிறுவனம் (Central Bureau of Investigation) எழுப்பியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு இந்திய நிறுவனங்களால் அந்நிய முகவர்களுக்கு வழங்கப்படும் பணத்தை கவனிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
நிதியமைச்கத்தின் நிதிச் சேவைகள் துறை, வங்கி அமைப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணம் அனைத்தையும் கவனித்து, சந்தேகத்திற்கிடமானவற்றை பற்றி சொல்ல வேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. குறிப்பாக சீன நிறுவனங்கள் மற்றும் மின்துறைக்கான சாதனங்கள் குறித்த பரிமாற்றங்களை கவனிக்க வேண்டும் வங்கித் துறையில் உயர் பதவியில் உள்ள ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு மூத்த அரசு அதிகாரியும் கூட இந்த கடிதம் அனுப்பப்பட்டதை உறுதி செய்தார், ஆனால் அவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளவில்லை. 'அதிகமான விலையை குறிப்பிட்டுள்ளதாக ஐயம் ஏற்படுத்தும், சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்களை நாங்கள் கண்டறிய முயற்சி செய்கிறோம்', என்று அந்த அலுவலர் குறிப்பிட்டார். எனினும், எதிர்காலத்தில் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகளை இப்பொழுதே சொல்வது, சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாதனங்களை இறக்குமதி செய்யும் போது அதிகமான விலையைக் குறிப்பிட்டு இந்தியாவின் கறுப்பு பணத்தை எளிதில் மறைத்து விட முடியும் என்று சிறப்பு விசாரணைக் குழு கடந்த வாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் குறிப்பிட்டுள்ளது.
இதன் படி செயற்கையாக கையாடல் செய்யப்பட்ட தொகை சுமார் ரூ.6000 கோடிகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடானி குழுமம் (Adani Group) அதிகமான விலையை குறிப்பிட்டதற்காக மத்திய புலனாய்வு நிறுவனத்தால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications