குவாலியர்: வங்கியில் 30 வருடமாக பதவி உயர்வு ஏதுமில்லாமல் பியூனாக மட்டும் பணியாற்றி சுமார் 7 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளார் ஒருவர். மத்திய பிரதேசத்தில் உள்ள மாநில அரசின் ஒரு கூட்டுறவு வங்கியில் 30 வருடமாக பணியாற்றி வரும் குல்தீப் யாதவ் நூதன முறையில் சொத்துகளை சேர்த்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஒருவர் மொட்டை கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தை வைத்து வருவாய் துறை அதிகாரிகள் குல்தீப் வீட்டை சோதனையிட்டபோது, அவருக்கு ஆறு பங்களாக்கள், இரண்டு சொகுசு கார்கள், ஏராளமான நகைகள் சொந்தமாக இருப்பது தெரிய வந்ததுள்ளது.
நாள் முழுவதும் சோதனை
வருவாய் துறை அதிகாரிகள் செவ்வாய் கிழமை முழுக்க குல்தீப் வீட்டில் சோதனை நடத்தினர். இச்சோதனையில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அதிகாரிகள் கைபற்றினர். 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு வங்கி பியூன் எப்படி 7 கோடி ரூபாய் வரை சொத்து சேர்க்க முடியும் என அதிர்ந்து போயினர்
சொத்து விபரங்கள்
சோதனையில் வருவாய் துறையினருக்கு இரண்டு அடுக்கு வீடு, 5 பெரிய வீடுகளுக்கான பத்திரங்கள், 2 செகுசு கார்கள், பணம், கிலோ கணக்கில் நகைகள், 4 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டங்கள், நிலம் மற்றும் வங்கி லாக்கருக்கான ஆவணங்கள் கைபற்றியுள்ளது.
மதிப்பீடு
குல்தீப் யாதவ் சம்பளத்தை ஒப்பிடும் போது இவரது சொத்து மதிப்பு சுமார் 200 சதவீதம் அதிகமானது என இச்சோதனையில் ஈடுப்பட்ட சுரேந்திரா ராய் ஷர்மா தெரிவித்தார். (ஐடியிலும், உற்பத்தி துறையிலும் ராத்திரி பகல் என்று பார்க்காமல் உழைக்கும் பலருக்கு மாத கடைசியில் நாக்கு தள்ளுகிறது... இவர் அழகாக 7 கோடி சம்பாதித்து விட்டார்... பலே குல்தீப் பலே..)
வருவாய் துறையினரின் கணக்கு
மாநில அரசு கூட்டுறவு வங்கியில் 30 வருடமாக பணியாற்றி வரும் குல்தீப் யாதவிற்கு 20,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் இருக்காது. ஆகையால் இத்தனை வருடத்தில் 20 லட்சத்திற்கு மேல் இவரால் சொத்துகளை சேர்ந்து இருக்க முடியாது என வருவாய் துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
வழக்கு
இதையடுத்து, அவர் சட்டத்திற்கு புறப்பாக செயல்களில் ஈடுப்பட்டும், லஞ்சம் வாங்கியதாகவும் குல்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications