மறைமுக வரி வசூல் 4.6 சதவீதம் உயர்வு!! வரி வசூல் இலக்கை எட்ட துடிக்கும் மத்திய அரசு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஏப்ரல்- ஆகஸ்ட் மாத காலகட்டங்களில் இந்தியாவில் மறைமுக வரி வசூல் சுமார் 4.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டங்களில் கலால் வரி மற்றும் சுங்க வரி வசூலும் அதிகரித்துள்ளது.

 

நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் சுங்கம், கலால் மற்றும் சேவை வரியாக மத்திய அரசு சுமார் 1,94,492 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கடந்த நிதியாண்டை விட 8611 கோடி அதிமாகும்.

 
மறைமுக வரி வசூல் 4.6 சதவீதம் உயர்வு!! வரி வசூல் இலக்கை எட்ட துடிக்கும் மத்திய அரசு..

கடந்த நிதியாண்டை விட கலால் வரி வசூல் 0.5 சதவீதம் அதிகரித்து 61,415 கோடி ரூபாயும், சுங்க வரி வசூல் 0.3 சதவீதம் அதிகரித்து 71,207 கோடி ரூபாயும், சேவை வரி வசூல் 15.1 சதவீதம் அதிகரித்து 61,870 கோடி ரூபாய் மத்திய அரசு வசூல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் அடுத்து வரும் மாதங்களில் சேவை வரியின் மூலம் அதிகப்படியாக நிதியை வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு 2014-15ஆம் நிதியாண்டிற்கான மறைமுக வரி வசூல் இலக்கு 6.24 இலட்சம் கோடி. இந்த இலக்கை எட்ட மத்திய அரசு நிதி சேர்க்கும் அத்தனை சாத்தியகூறுகளையும் கண்டறிந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indirect tax collections up 4.6% in Apr-Aug

Indirect tax mop up inched up by 4.6 percent in the April-August period of this fiscal, while customs duty and excise duty collections rose marginally.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X