டெல்லி: நாட்டில் கமரக்கட்டு கூட நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் நிலையில் விமான டிக்கெட்டின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் விலை குறைப்பதில் போட்டி வேற..
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தக போட்டிக்காக பயண கட்டண விலையை போட்டி போட்டு கொண்டு குறைந்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. இந்த முறை விலை குறைத்தது ஸ்பைஸ்ஜெட்!!.
ரூ.699-இல் விமான பயணம்
2015ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையில் உங்கள பயணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கா முன்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
டிக்கெட் பணம் கோவிந்தா!! கோவிந்தா!!
இத்தள்ளுபடி விலையில் பயணத்தை பதிவு செய்யும்போது, நீங்கள் பயணத்தை ரத்து செய்ய நினைத்தால் பணம் திரும்ப கிடைக்காது. மேலும் இத்தள்ளுபடி வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு பொருந்தாதது.
மக்களை உசுப்பேத்தும் செயல்
இவ்வளவு குறைவான விலையில் விமான பயணம் செல்ல யாருக்குதான் ஆசை இருக்காது. மக்களை ஆசை விலையை காட்டி அதற்கு அவர்களை பழக்கபடும் முறை தான் இந்த தள்ளுபடிகள். மேலும் இது நிறுவனங்களுக்கு தற்போது நஷ்டம் அடைந்தாலும், சில வருடங்களில் அது கண்டிப்பாக லாபமாக மாறும். ஆனால் இது உண்மையில்லை.. அடுத்து சில வருடங்களில் விமான பயணம் கட்டணம் மேலும் குறையும்.
ஏன் அப்படி
இந்திய விமான போக்குவரத்து வாரியம் சுமார் 7 புது நிறுவனங்களுக்கு இந்திய வானில் பறக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிறுவன சேவைகள் அடுத்து சில வருடங்களில் துவங்க உள்ளது.
விமான சரக்கு போக்குவரத்து
இந்தியாவில் இன்றளவும் பிரபலமாகத விமான போக்குவரத்து முறையை கண்டறிந்து டெல்லி நிறுவனம். எனவே இச்சேவையை இந்தியாவில் செயல்படுத்த மத்திய அரசிடம் தடையற்ற சான்றிதழ் பெற்றதுள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications