டெல்லி: இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கேற்ப மாருதி சுசுகி நிறுவனம், இந்தியாவில் உள்ள போட்டி மற்றும் உற்பத்திச் சூழ்நிலைகளுக்கு எதிராக உள்ள காரணிகளை உடனடியாக நீக்கினால், இந்தியா உலகின் மிகப்பெரும் கார் உற்பத்தியாளராக வர திறனும் வாய்ப்பும் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா
"இந்தியாவில் உற்பத்தி செலவுகள் அரசின் பல்வேறு நடைமுறை, கட்டுப்பாடுகள், சட்ட நடைமுறைகள் மற்றும் கொள்கைகளால் உயர்ந்துள்ளன" என அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கெனிச்சி ஆயுகாவா இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
தடைகளே நீங்கும்
இந்தியா வர்த்தகம் செய்ய எளிமையான நாடு அல்ல என்று குறிப்பிட்ட அவர் "பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் போட்டி மற்றும் உற்பத்தியில் உள்ள பல்வேறு தடைகளை விரைவில் அகற்றப்படும் என முழுமையாக நாங்கள் நம்புகிறோம்" எனவும் இந்தியா உலகின் உற்பத்தியல் மிகவும் போட்டித்திறன் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக வரும் எனவும் தெரிவித்தார்.
மாருதி சுசுகி நிறுவனம்
பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டத்தை வரவேற்ற அவர், மாருதி சுசுகி நிறுவனம் 1983ஆம் ஆண்டில் முதன் முதலில் இந்தியாவில் உற்பத்தியைத் துவங்கிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
ஒசாமு சுசுகி
"கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய சந்தை மற்றும் நாட்டின் முக்கியத்துவத்தையும் மிக உயர்ந்த தரம் வாய்ந்த உற்பத்தி இங்கு சாத்தியம் என்பதையும் சுசுகி மோட்டார் நிறுவனம் அறிந்திருந்தது" என அந்நிறுவன தலைவர் ஒசாமு சுசுகி தெரிவித்தார். உலக அளவில் சுசுகி குழுமத்தின் வர்த்தக முயற்சிகளில் மாருதி சுசுகி வெற்றிகரமான ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
தயாரிப்பு
உலகின் பிற நாடுகளில் தயாரிப்புகளின் செலவை ஒப்பிடுகையில், இந்தியாவில் மாருதி சுசுகி தயாரிப்புகளின் செலவுகள் குறைவு எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி
இதனால், 1986 ஆம் ஆண்டு முதல் மாருதி நிறுவனம் கார்களை ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியது. 1994 ஆம் ஆண்டு சுசுகி ஜப்பான், இந்தியாவை தனது ஜென் ரகக் கார்களின் உற்பத்தி மையமாக ஆக்கி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது.
உதிரிபாகங்கள் தயாரிப்பு
1983 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மாருதி நிறுவனம் சிறப்பான உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய சிறந்த முயற்சிகளை செய்துவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications