பெங்களுரூ: இண்டர்நெட் நிறுவனமான யாஹூ இந்தியாவில் பெங்களுரூ கிளையில் உள்ள சாப்ட்வேர் பணியாளர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் யாஹூ இந்திய பணியாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
யாஹூ மட்டும் அல்ல
தற்போது யாஹு மட்டும் அல்லாமல் பன்னாட்டின் பல இண்டர்நெட் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அதிகளவில் வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் சில பத்திரிக்கைகள் ஐடித்துறையில் மீண்டும் ரிசிஷன் துவங்கியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் தெரிகிறது என தெரிவித்துள்ளது.
யாஹூ நிறுவனத்தின் கதி
மேலும் இந்நிறுவனத் தகவல் படி 400 பணியாளர்கள் வெளியேற்ற உள்ளதாகவும், மற்றோர் 2000 பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மொத்த இந்தியாவும் காலி
இதுக்குறித்து NextBigWhat என்ற பத்திரிக்கை கூறுகையில் யாஹூ நிறுவனம் இந்தியாவில் பணியாற்றும் அனைவரையும் நீக்குவதாகவும், அதில் 250 பேரை மட்டும் அமெரிக்காவின் சன்னிவேல் அலுவலகத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். யார் அந்த 250 பேர்.
வளர்ச்சி பாதை
செவ்வாய் கிழமை யாஹூ நிறுவனத்தின் மூத்த தலைவர் கூறுகையில் "நிறுவனத்தின் அனைத்து செயல்பாடு வளர்ச்சியை கருத்தில் கொண்டே எடுக்கப்படுகிறது. மேலும் நிறுவனம் அடுத்த தலைமுறை டெக்னாலஜி வளர்ச்சிக்கு தயாராகி வரும் நிலையில் சில கடுமையான முடிவுகளும் எடுக்கப்படுகிறது." என யாஹூ தெரிவித்தது.
5 மாத சம்பளம்
நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் பணியாளர்களுக்கு நவம்பர் 7ஆம் தேதிதான் கடைசி தான். இவ்வாறு வெளியேறுபவர்களுக்கு 5 மாத சம்பளத்தை நிறுவனம் அளிக்க திட்டமிட்டுள்ளது.
நாங்க இருக்கோம்...
இச்செய்தி வெளி வந்த சில நிமிடங்களில் டிவிட்டரில் பல நிறுவனங்களின் தலைவர்கள், யாஹூ நிறுவன தலைவர்களை தங்களின் நிறுவனத்திற்கு அழைத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications