தெலுங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட்!! நவம்பர் 5ஆம் தேதி
ஹைதெராபாத்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரிந்த தெலுங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் நவம்பர் 5ஆம் தேதி துவங்கும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

மேலும் இதற்கான முடிவுகள் மாநில அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜூன் 2ஆம் தேதி தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டது இதன் பின் வெளியிடும் முதல் பட்ஜெட் இது. எனவே இதற்கு அம்மாநில மக்கள் மிகவும் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஆந்திர மாநிலமும், தெலுங்கானா மாநிலமும் இணைந்தப்படி, அந்திர மாநில நிதியமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டி பட்ஜெட் தாக்கல் செய்தார்.


Click it and Unblock the Notifications