டெல்லி: இந்தியாவில் இருக்கும் 2014 நிலக்கரி சுரங்களுக்கும் மத்திய அரசு தடை சில மாதங்களுக்கு முன்பு தடைவிதித்து இருந்தது. இதனால் இந்தியாவின் மின் உற்பத்தியில் பெரும் பின்னடைவு சந்தித்தது.

கடந்த 1993ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்.
தற்போது இருக்கும் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, புதிய உரிமங்களை ஆன்லைன் மூலம் ஏலம் விட நிதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது இதற்கான பணிகளை விரைவில் துவங்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீட்டு மறு ஒதுக்கீடு செய்ய அவசர சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை அடுத்த 3-4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி மாதத்தில் ஏலம் நடக்க உள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக 72 சுரங்கங்கள் ஏலம் விடப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications