டெல்லி: சுவிஸ் ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் கருப்பு பணம் வைத்திருந்த அனைவரின் பெயரையும் மத்திய அரசு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இவ்வங்கியில் கணக்கு வைத்திருந்த பெரும் புள்ளிகள் பற்றி இதுவரை எந்த நாடும் இப்படி பகிரங்கமாக பெயர் பட்டியலை வெளியிட்டதில்லை. இச்செயலுக்கு இந்தியா மக்கள் அனைவரும் சமுக வலைதளங்களில் தங்களின் பாசிடிவான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
கருப்பு பணம்
கருப்பு பணம் இந்தியாவிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றால் அது சாத்தியப்படாத ஒன்று. இதற்கு சில மாதங்கள் தேவைப்படும், தற்போது இப்பட்டியலில் உள்ள கணக்காளர்களை விசாரணை செய்து வருகிறது கருப்பு பணம் ஒழிப்பு அமைப்பு. விசாரணை முடிந்த பின்னரே பணத்தை இந்தியாவிற்குள் கொண்ட வர முடியும்.
30 பில்லியன் டாலர்
விசாரணை முடிந்து கருப்பு பணம் இந்தியாவிற்கு வரும் பட்சத்தில் இந்திய அந்நிய செலாவணியின் அளவு சுமார் 30 - 35 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் என் பாங்க் ஆஃப் ஆமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.
ஆய்வுகள்
அன்னிய செலவாணிக்கு வருவது 35 பில்லியன் டாலர் என்றாலும், மத்திய அரசு போராடுவது அதற்கு மட்டும் அல்ல இந்தியர்களின் சொத்துகள் கருப்பு பணமாக வெளிநாட்டு வங்கிகளில் இருப்பது 200 பில்லியன் டாலர். இதனை இந்தியாவிற்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.
ஆய்வுகள் கணிப்புகள் எல்லாம் சரியானதா??
இதுவரை இந்தியர்களின் கருப்பு பணம் எவ்வளவு என்பதன் சரியான புள்ளிவிபரம் யாரும் அறிவிக்கவில்லை, தற்போது வெளிவரும் தகவல் அனைத்தும் தனியார் நிறுவனங்களின் ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் மட்டுமே.
அத்வானி
பாஜக-வின் மூத்த தலைவர்களின் ஒருவரான எல்.கே அத்வானி 2011ஆம் ஆண்டு தான் கருப்பு பணம் குறித்து வாஷிங்டன் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் இந்தியார்கள் வெளிநாடு வங்கிகளில் கருப்பு பணமாக சுமார் 28 இலட்சம் கோடி அதாவது 466 பில்லியன் டாலர் இருப்பதாக தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில் என்ன நிலவரம்
2012ஆம் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் அனைத்து சுவிஸ் வங்கிகளிலும் சேர்ந்து இந்தியர்கள் வைசத்துள்ள பணம் வெறும் 2.1 பில்லியன் டலார் மட்டும் தான் என குறிப்பிடபட்டுள்ளது. 466 பில்லியன் டாலருக்கும் 2.1 பில்லியன் டாலருக்கும் ரொம்ப தூரம்.
உண்மை வெளியில் வரும்..
கணிப்புகளும் சரி, ஆய்வுகளும் சரி அனைத்தும் ஒன்றுக்கொன்று முறன்பாடாகவே உள்ளது. இதனால் மத்திய நிதியமைச்சகம் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத்தின் அளவை பற்றி குறிப்பிட்டுள்ளது. இவ்வழக்கின் முடிவுகள் வெளிவரும் போது உண்மை தெரியவரும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications