டெல்லி: கடுமையான நஷ்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனால் பணியாளர்களுக்கு சம்பளம் சரியான தேதியில் அளிக்காமல் காலதாமதம் தாழ்த்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் நவம்பர் மாத சம்பளம் அளிப்பதில் 1 முதல் 3 நாள் வரையில் காலதாமதம் ஏற்படும் என இந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய முதலீட்டாளர்கள்
நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்த புதிய முதலீட்டாளர்களை கவரும் வண்ணம் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் நவம்பர் மாதம் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் பணியாளர்களுக்கு சம்பளம் சரியான தருணத்தில் அளிக்கமுடியவில்லை எனவும் சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பணியாளர்கள்
சில மாதங்களில் இறுதி நாள் விடுமுறையாக இருந்தால் முன்கூட்டியே சம்பளம் நிறுவாகம் அளித்துள்ளது, ஆதாலால் இது நிறுவனத்திற்கு பின்னடைவு இல்லை என்று ஒரு பணியாளர்கள் நிர்வாகத்திற்கு சாதகமாகவே பத்திரிக்கையாளர்களுக்கு பதில் கூறினார்.
விமான நிறுவனங்கள்
இந்தியாவில் பல விமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகிறது. இதனால் பணியாளர்கள் பாதிக்கப்படுவது கவலைக்குரியதாகம். ஆனாலும் இது நிறுவனங்களின் தவிர்க்க முடியாத நிலையாகும்.
எரிப்பொருள் விலை
மேலும் நாட்டில் விமான எரிப்பொருள் விலை, விமான செயல்பாட்டு கட்டணத்தில் சுமார் 40-45 சதவீதமாக உள்ளது, இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற நிறுவனங்களுக்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது என விமான நிறுவனங்கள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications