சென்னை: ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின் படி இந்தியாவில் இருக்கும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் ஏடிஎம் சேவையில் புதிய கட்டப்பாடுகளை விதித்து, கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இலவச ஏடிஎம் சேவையை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து கணக்காளர்களின் வங்கி ஏடிஎம்-இல் இலவசமாக 3 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் இலவசமாக 2 முறையும் ஏடிஎம் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என வங்கி தெரிவித்தன. உரிய முறைக்கு மீறினால் ஒரு முறை பயன்பாட்டிற்கு 20 ரூபாய் கட்டணத்தை வசூல் செய்கிறது.
லட்சுமி விலாஸ் வங்கி
இதுக்குறித்து லட்சுமி விலாஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், இவ்வங்கியின் கணக்காளர்கள் வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ளலாம் அவை அனைத்தும் இலவசம்
பிற வங்கி ஏடிஎம்
மேலும் ஒரு மாதத்திற்கு லட்சுமி விலாஸ் வங்கி கணக்காளர்கள் 5 முறை இலவசமாக பயன்படுத்திக் முடியும். இதில் ஆறு முக்கிய நகரங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகரங்கள்
மேலும் பெருநகரங்களில் இருக்கும் ஏடிஎம்களில் 3 முறை இலவசமாக ஏடிஎம் சேவையை பயன்படுத்த முடியும்.
புதிய வாடிக்கையாளர்
லட்சுமி விலாஸ் வங்கி இந்தியாவில் பெருநகரங்கள் மட்டும் அல்லாமல் சிறு நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த இலவச ஏடிஎம் சேவையின் முலம் இவ்வங்கி புதிய வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications