மும்பை: இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், விலை உயர்வு பிரச்சனைகளை குறைக்கவும் ரிசர்வ் வங்கி இன்று காலை வெளியிட்ட தனது இருமாத நாணய மறுஆய்வு கொள்கையில் மாற்றம் எதும் செய்யாமல் வெளியிட்டுள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் பண இருப்பு விகிதம் (CRR) மற்றும் எஸ்எல்ஆர் விகிதத்தில் எவ்வதமான மாற்றுமும் செய்யவில்லை. மேலும் இதை 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாற்ற உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணப்புழக்கம்
நாட்டில் நிலவும் பணப்புழக்கத்தை நிலைபெற செய்ய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம், சிஆர்ஆர் மற்றும் எஸ்எல்ஆர் போன்ற எந்த விதமான விட்டி விகிதத்தையும் மாற்றவில்லை.
ரெப்போ விகிதம்
ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 8 சதவீதமாக கடந்த 6 மாதமாக வைத்துள்ளது.
பண இருப்பு விகிதம்
அதேபோல் வங்கிகளில் இருக்கும் டெப்பாசிட் தொகையில் சில விகிதம் பணமாக வங்கிகள் வைத்திருக்கும் பண இருப்பு விகிதத்தையும் 4 சதவீதமாக வைத்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு
மேலும் ரிசர்வ் வங்கி நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் பணவீக்கத்தை 2016ஆம் ஆண்டிற்குள் 6 சதவீதமாக குறைக்க பல முயற்சிகள் செய்துவருகிறது. இதன்படி நாட்டின் பணபுழக்கத்தை அதிகரிக்க வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்து ரிசர்வ் வங்கி.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
மேலும் அடுத்து வரும் மாதங்களில் நாட்டின் இறக்குமதி அதிகரிக்கும் இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த இருமாத நாணயக் கொள்கை
ரிசர்வ் வங்கியின் அடுத்த இருமாத நாணயக் கொள்கை பிப்ரவரி 3ஆம் தேதி 2015ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.