டெல்லி: சென்னையில் உள்ள நோக்கிய தொழிற்சாலையை வாங்க நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இப்போட்டியில் பன்னாட்டு எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபாக்ஸ்கான், உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனமும் நோக்கியா நிறுவனத்தால் கைவிடப்பட்ட சென்னை தொழிற்சாலையை வாங்க திட்டம்போட்டு வருகிறது.
மேலும் டெலிகாம் மற்றும் தகவல் தொலைதொடர்பு அமைச்சகம் இத்தொழிற்சாலையை விற்க சட்ட ரீதியில் எவ்விதமான தடையும் என்றும் தெரிவித்துள்ளது.
2 பில்லியன் டாலர்
இந்த தொழிற்சாலையை வாங்கவும், மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
வரி நிலுவை
மேலும் இத்தொழிற்சாலை விற்பனையின் மூலம கிடைக்கும் நிதி நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசுக்கும் இடையே இருக்கும் வரி நிலுவை வழக்கை முடிக்க உதவு என நோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட்
நோக்கிய நிறுவனத்தின் மொபைல் விற்பனை மற்றும் தயாரிப்புகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டாலருக்கு கைபற்றிய நிலையில், வரி நிலுவையில் உள்ள இந்த தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் பெறவில்லை. இதனால் நோக்கிய நிறுவனம் இத்தொழிற்சாலை பிற நிறுனங்களுக்கு விற்று வரி நிலுவையை பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துள்ளது.
ஃபாக்ஸ்கான்
2 பில்லியன் டாலர் முதலீட்டுடன் இத்தொழிற்சாலையை வாங்க துடிக்கும் ஃபாக்ஸ்கான் இந்தியாவில் இருந்து தனது உலக உற்பத்தி தேவையை 25 சதவீதம் அளிக்க திட்டமிட்டுள்ளது.
உற்பத்தியில் முன்னணி
ஃபாக்ஸ்கான் நிறுவனம் மொபைல் மட்டும் அல்லாமல், கம்பியூட்டர், டேப்லெட், பிற தொலைதொடர்பு கருவிகள் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது.
வாடிக்கையாளர்கள்
இந்நிறுவனத்திற்கு உலகின் பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளராக உள்ளனர், அதில் சில ஏசர், ஆப்பிள், அமேசான்ஷ பிளாக்பெரி, சிஸ்கோ, டெல், கூகிள், ஹெச்.பி, மைக்ரோசாப்ட், மோட்டோரோலா, நோக்கியா, சோனி, தோஷிபா ஆகியவை இந்நிறுவன வாடிக்கையாளர் பட்டியலில் அடக்கம்.