டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கடந்த சில மாதங்களாக முக்கிய துறைகளில் ஏற்பட்ட திடீர் முன்னேற்றமும், ஏற்றுமதி அதிகரிப்பாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த வருடத்தை ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாகவே உள்ளது. 2013-14ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதமாக முடிவடைந்தது என மத்திய அரசின் அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
வியாழக்கிழமை மதிய வேளையில் நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது.
2014ஆம் நிதியாண்டில் முதல் 6 மாத எட்டிய 5 சதவீத வளர்ச்சி 9 காலாண்டின் வீழ்ச்சியாகும், மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கியும் இணைந்து நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க கடுமையான செயல்திட்டஙகளை தீட்டி வருகிறது. 2013ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 4.8 சதவீதத்திற்கு குறைவான அளவில் பதிவானது.

நாட்டின் தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கினாலும், கச்சா எண்ணெயின் விலை சரிவு நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் வளர்ச்சியை குறைத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக விலை உயர்வும், பணவீக்கத்தையும் குறிப்பிட்டுள்ளது நிதியமைச்சகம். இப்பிரச்சனைகளை களைய நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி அடைய வேண்டும், பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீட்டை ஈர்க்க வேண்டும், மேலும் பென்ஷன் திட்டங்களிலும், இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீட்டை அதிகரிக்க விதிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடைசியாக ரூபாயின் மதிப்பை அதிகரித்த அதிகப்படியான டாலர் முதலீட்டை பெற வேண்டும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
மேலும் 2015ஆம் நிதியாண்டின் முடிவில் நாட்டின் வளர்ச்சி கண்டிப்பாக 5.5 சதவீதத்தை எட்டும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்து இருந்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications