20 வருடத்திற்கு பிறகு மீண்டும் அச்சிடப்படும் 1 ரூபாய் நோட்டுகள்!!

டெல்லி: இந்தியாவில் அதிகம் புழக்கத்திலும், பழக்கத்திலும் இல்லாத 1 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் அச்சிட திட்டமிட்டுள்ளது.

அதுபற்றி மத்திய அரசு கூறுகையில் நாணயம் அச்சிடும் சட்டம் 2015இன் படி, ஜனவரி 1, 2015ஆம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செலவுகள்

செலவுகள்

அச்சிடப்படும் செலவுகள் அதிகரித்தால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் குறைந்த மதிப்புடைய ரூபாய் தாள்களை அச்சிடுவதற்கு முற்றுபுள்ளி வைத்தது. இதன் படி ரூ.1 நோட்டுகளை 1994ஆம் வருடமும், ரூ.2 நோட்டுகளை 1995ஆம் ஆண்டும், ரூ.5 நோட்டுகளை 1995ஆம் ஆண்டும் நிறுத்தப்பட்டது.

1 ரூபாய் நோட்டில் உள்ள வித்தியாசம்

1 ரூபாய் நோட்டில் உள்ள வித்தியாசம்

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ₹2, ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 மற்றும் ₹1,000 என அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு, ஆர்.பி.ஐ கவர்னரால் கையெழுத்திடப்பட்டு வெளிவரும். ஆனால் 1 ரூபாய் தாள் மட்டுமே மத்திய அரசால் அச்சிடப்பட்டு, நிதியமைச்சக செயலாளர் கையெழுத்துடன் வெளிவரும்.

வண்ணத்திலும் வித்தியாசம்

வண்ணத்திலும் வித்தியாசம்

புதிய ஒரு ரூபாய் தாள்கள் பழைய தாள்களை போல் அல்லாமல் பிங்க் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். இதற்கு முன் வெளியிட்ட அனைத்து ஒரு ரூபாய் தாள்களும் கருநீலம் வண்ணத்தில் இருக்கும்.

இத படிக்க மறக்காதிங்க...

இத படிக்க மறக்காதிங்க...

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+