விமானம் மாயம்: ஏர் ஏசியா பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 7.8% சரிவு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோலாலம்பூர்: இன்தோனேஷியாவின் சுராபாயா நகர விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியா விமானம் மாயமானது. இதன் எதிரோலியாக ஏர் ஏசியா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7.8 சதவீதம் சரிந்துள்ளது.

இச்சம்பவத்தினால் விமான பயணிகள் ஏர்ஏசியா விமான நிறுவனத்தின் சேவையை பெற தங்குகின்றனர். மேலும் இந்நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளது.

விமானம் மாயம்: ஏர் ஏசியா பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 7.8% சரிவு

மேலும் இந்நிறுவனத்தின் வருடாந்திர லாபம் சுமார் 5 சதவீதம் வரை குறையும் என கோலாலம்பூர் தலைமையிடமாக கொண்ட ஒரு முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கோலாலம்பூர் சந்தையில் இந்நிறுவனத்திற்கு இருந்த "BUY" தகுதி தற்போது "sell" ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம் பங்குசந்தை வர்த்தகர்கள் தங்களிடம் இருந்த ஏர்ஏசியா பங்கு இருப்பை தொடர்ந்து குறைந்து வருகின்றனர். மேலும் இன்று காலை வர்த்தக துவக்கத்தில் இதன் பங்கு விலை சுமார் 12.9 சதவீதம் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் இந்நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து சேவைகளை அளித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia shares fall 7.8 percent, biggest drop in three years after plane goes missing

Shares in AirAsia fell 7.8 percent on Monday, their biggest one-day drop in more than three years after one of its aircraft went missing on its way to Singapore from the Indonesian city of Surabaya.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X