புனே: பிரதமர் நரேந்திர மோடியின் ஜன் தண் யோஜனா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தற்போது 98 சதவீத குடும்பங்களுக்கு வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
வங்கித்துறையின் கூட்டமான கியான் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதிச்சேவை பிரிவின் செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா அவர் கூறுகையில்,"வங்கிகள் செய்த ஆய்வுகளின் படி இந்தியாவில் 98 சதவீத குடும்பங்களுக்கு வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மேலும் இந்த ஆய்வு இந்தியாவில் இருக்கும் அனைத்து டவுன் மற்றும் கிராமபுறங்களில் இருக்கும் மக்கள் மத்தியில் நடக்கப் பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் உள்ளது, இதில் 3 கோடி குடும்பங்களை வங்கிளால் அடைமுடியவில்லை என்றாலும், மீதமுள்ள 21.9 கோடி குடும்பங்களுக்கு வங்கிகணக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு 98 சதவீத இலக்கை அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வங்கிகளால் அடையமுடியாத 3 கோடி குடும்பங்களை மத்திய அரசு விளம்பரம் மூலம் கவரவும் திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்தார் ஆதியா.


Click it and Unblock the Notifications