டெல்லி: இந்தியாவில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கிகளில் பெறப்படும் வீட்டுக் கடன் மற்றும் வீட்டு மேம்பாட்டு கடன்களில் இனி சோலார் பேனல்கள் அமைப்பதற்கு தனியாக ஒரு தொகை நிர்ணயம் செய்யலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இனி வீட்டு கடன் பெறும் அனைவரும் தங்களின் புதிய வீட்டில் சோலார் பேனல்களை அமைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தை வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஒப்புதலை பொதுத்துறை வங்கிகள் கண்டிப்பாக அளிக்கும்.
இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிகளில் கூட்டமைப்புக்கு அளித்துள்ளது.
மலிவு விலை மின்சாரம்
வீடுகளில் அமைக்கப்படும் Rooftop solar plants மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில், மிகவும் குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்கலாம். மத்திய அரசு மானியங்கள் எதுவும் இல்லாமல் ஒரு கிலோவாட் மின்சாரம் வெறும் 7 ரூபாய் என்ற விலையில் மின்சாரம் தயாரிக்கலாம். சோலார் மின்சார உற்பத்திக்கு மத்திய அரசு தற்போது 15 சதவீத மானியங்களை அளிக்கிறது.
பொதுத்துறை வங்கிகள்
நிதியமைச்சகத்தின் அறிவிப்பை ஏற்று பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களை, சோலார் பேனல் அமைக்க கடன் பெறும் அனைவரும் Ministry of New and Renewable Energy ஒப்புதல் பெற்ற கேன்வாஸ் சோலார் போட்டோவோல்டாயிக் ( canvass solar PVs (photovoltaic)) பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
8 வங்கிகள்
தற்போது இத்திட்டத்தை 8 வங்கிகளில் அமல்படுத்தி உள்ளனர்- இதில் பாங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, ஸ்டேட பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியன அடக்கம்.
இந்திரா பத்மினி
இதுகுறித்து இந்நிறுவனத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் இந்திரா பத்மினி கூறுகையில்,"எங்களது வங்கி மத்திய அரசின் அறிவிப்பிற்கு முன்னேறே சூரிய திட்டத்தின் மூலம் சோலார் பேனல்களை அமைப்பதற்கு 10 இலட்சம் வரை கடன்களை அளித்து வருகிறோம்" என தெரிவித்தார்.
முன்னணி நிறுவனங்கள்
சோலார் பேனல் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் சில நிறுவனங்களை முன்னணியாக திகழ்கிறது, அவை பிரிட்ஜ் டூ இந்தியா, டாடா பவர் சோலார் மற்றும் சு-கேம் பவர் சிஸ்டம்ஸ் ஆகியவை அடங்கும்.
112 மெகாவாட்
இந்தியாவில் இன்றைய நாள் முதல் வீடுகளில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் மூலம் வெறும் 112 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications