சென்னை: நாம் தினமும் எதாவது ஒரு இடத்தில் டெபிட் கார்டு அல்லது கிரேடிட் கார்டுகளை பயன்படுத்தி கொண்டே இருக்கிறோம். இது நாம்முடைய பண பரிமாற்ற முறையை மிகவும் எளிமையாக கையழுகிறது. மேலும் நமது பணத்தை பத்திரமாகவும் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது.
சரி, டெபிட் கார்டு மற்றும் கிரேடிட் கார்டுக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசங்களை பற்றி இப்போது பார்போம்.
டெபிட் கார்டு
நீங்கள் வங்கி சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் பொழுது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி உங்களுக்கும் அளிக்கும். இதனை பயன்படுத்தி நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிமாற்றமும் உங்கள் கணக்கில் இருக்கும் பண நிலுவையில் இருந்து பணம் பெறப்படும்.
எனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்த முடியாது. மேலும் இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி வகிதங்கள் முற்றிலும் கிடையாது.
கிரேடிட் கார்டு
டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரேடிட் கார்டு பயன்பாடு முற்றிலும் மாறுப்பட்டது. கிரேடிட் கார்டு பெற்றுள்ள ஆனைவருக்கும் வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.
உதாரணமாக உங்கள் வங்கி கணக்கிற்கு 40,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம், இந்த 40,000 ரூபாய் வரை நீங்கள் பணம் எதுவும் செலுத்தாமலே செலவு செய்துக்கொள்ளலாம்,ஆனால் இத்தகைய நீங்கள் வங்கிக்கு மீண்டும் செலுத்தும் வரையில் குறிப்பிட்ட வட்டி தொகையை செலுத்த வேண்டும். பணம் கிடைக்கிறது என்று கண்மூடித்தனமாக செலவு செய்தால் வருமானம் மொத்தமும் வட்டிக்கட்டவே போதுமானதாக இருக்கும்.
முடிவுரை
முடிந்த வரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள், இக்காட்டான சூழ்நிலையில் மட்டும் கிரேடிட் கார்டை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். மேலும் கிரேடிட் கார்டில் செலவு செய்த தொகை வங்கி அளித்த குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி, வட்டி தொகை சேமிக்க பழகவும்.