சென்னை: நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 38,000 புதிய நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தென்இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் புதிய நிறுவனங்கள் திறந்துள்ளதாக மத்திய நிறுவன விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இத்தகைய நிறுவனங்களில் வென்சர் கேப்பிடலின் அளவு அதிகளவில் குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு ஆறிக்கை கூறுகிறது.

அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் முதலீட்டின் அளவு சுமார் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது என ஆய்வு அறிக்கை தெரிவித்தது, மேலும் அந்திரா பிரதேசம் (18%) மற்றும் கர்நாடகம் (9.5%) மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வென்சர் கேப்பிடல் அதிகளவில் குறைந்துள்ளது.
2014ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் 10 டீல்களில் வெறும் 39 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடாக பெற்றது, அதே 2013ஆம் ஆண்டு 118 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.

2012ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2013ஆம் ஆண்டில் முதலீடு 27 சதவீதம் அதிகரித்தது.
வென்சர் கேப்பிடல்
புதிய நிறுவனங்களில், நிறுவனர்கள் அல்லாத பிற முதலீட்டாளர்கள் நீண்ட கால லாப நோக்குடன் முதலீடு செய்வார்கள் இதேயே நாம் வென்சர் கேப்பிடல் என்று கூறுகிறோம். மேலும் இத்தகைய முதலீடு புதிய நிறுவனங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இதில் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான ரிக்ஸ் ஒழிந்துக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications