டெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறைக்குள் 60 ஆண்டு காலத்திற்கு பிறகு அடியெடுத்து வைக்கும் டாடா குழுமத்தின் புதிய விமான நிறுவனமான விஸ்தாரா தனது முதல் விமான சேவையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக துவங்கியது. எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி, "சரியாக செய்வதே" தங்கள் குறிக்கோள் எனவும் விஸ்தாரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய விமான போக்குவரத்து துறையின் மோசமான காலத்தில் களமிறங்கிய விஸ்தாரா கூறுகையில், "முழுமையான சேவை அளித்திடும் விமான போக்குவரத்து என்ற பெயரில் பகட்டாகவோ ஆடம்பரமாகவோ இருக்காது".
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்ட விஸ்தாராவின் 51% பங்குகளை டாடா குழுமம் கொண்டுள்ளது; மீதமுள்ள 49% பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொண்டுள்ளது.
டாடா விமான சேவை (ஏர் இந்தியா)
60 ஆண்டுகளுக்கு முன், சுமார் 1950-களில் டாடா விமான சேவை ஏர் இந்தியாவாக பெயர் மாற்றப்பட்டு, பின் தேசியமையமாக்கப்பட்டது. அதற்கு பிறகு டாடாவின் முதல் விஸ்தாரா விமானம் டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்று பறந்தது.
ரத்தன் டாடா
தொடங்கப்பட்ட முதல் விமானத்தை டாடா குழுமத்தின் தலைவர் திரு. சைரஸ் மிஸ்ட்ரி வரவேற்றார். முன்னாள் தலைவரான திரு. ரத்தன் டாடா அவர்கள் டெல்லியில் இருந்து விமானம் கிளம்புவதற்கு முன்பு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் குழுமத்தின் கனவு நனவாகி விட்டது, "கனவுக்கு இன்று உயிர் கிடைத்து விட்டது," என அவர் கூறினார்.
டெல்லி - மும்பை
இந்நிறுவனத்தின் முதல் பயணமாக வெள்ளிக்கிழமை மதியம் 12.51 மணிக்கு டெல்லி சர்வதேச விமானத்தை விட்டு கிளம்பிய இந்த விமானம் மதியம் 2.26 மணிக்கு மும்பையில் தரை இறங்கியது.
பிரசாத் மேனன்
"பெரிய அளவில் தம்பட்டம் அடித்து பின் அதிருப்தியை ஏற்படுத்துவதை விட, செய்யும் போதே நாம் சரியாக செய்ய வேண்டும்," என விஸ்தாராவின் தலைவர் திரு. பிரசாத் மேனன் செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் பிற நிறுவனங்களை அதிரடியான ஆஃபர்களை அள்ளி விசாமல் சரியான கட்டணத்தில் சிறப்பான சேவை அளிக்கபோகிறது விஸ்தாரா.
ஏர்ஏசியா கூட்டணி
மலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர்ஆசியா இந்தியாவிலும் (உள்நாட்டு பிரிவில்) 30% பங்குகளை டாட்ட குழுமம் கொண்டுள்ளது. ஆனால் இந்த கூட்டின் படி, அன்றாடம் நடக்கும் செயல்பாடுகளில் இவர்கள் அங்கம் வகிப்பதில்லை.
3வது விமான நிறுவனம்
மாநிலத்தால் நடத்தப்படும் ஏர் இந்தியா மற்றும் தனியாரால் நடத்தப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பிறகு, நம் நாட்டில் முழு சேவையை அளித்திடும் மூன்றாவது விமான நிறுவனமாக விஸ்தாரா விளங்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications