சென்னை: இந்தியாவில் மொபைல் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனம், நிதிநெருக்கடியால் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியை கடந்த மாதம், முற்றிலும் முடக்கியது இதன் மூலம் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் தற்காலிக மூடலை எதிர்த்து இந்நிறுவனத்தின் நிலையை மாநில அரசின் கவனத்தை கொண்டு வர இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வருகிற 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நிறுவன மூடல்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளரான நோக்கிய நிறுவனம் முடங்கியதால் இந்தியாவில் இந்நிறுவனத்தின் நிலை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் இந்நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி உற்பத்தி பணிகளை முடக்கியது பாக்ஸ்கான்.
பேச்சுவார்த்தை
மேலும் பணியாளர்கள், பாக்ஸ்கான் நிர்வாகத்திற்கு இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இவை அனைத்தும் தோல்வியுற்றதால் பணியாளர்கள் போராட்டத்திற்கு குதித்துள்ளனர்.
அரசின் உதவி
பாக்ஸ்கான் நிறுவன பணியாளர்கள் சிஐடியூ அமைப்பின் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் உதவியை நாடி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளனர்.
வீஆர்எஸ்
மேலும் பாக்ஸ்கான் நிர்வாகம், பணியாளர்கள் பலரை சுயவிருப்பு ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோக்கியா நிறுவனத்தை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனமும் லீஸ்டில் இணைந்துள்ளது.