டெல்லி: நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் விஷால் சிக்கா பிரதமரிடம், இந்தியாவின் மென்பொருள் மற்றும் சேவை பிரிவில் புதுமையான விஷயங்களை உருவாக்க இன்போசிஸ் நிறுவனம் 1,500 கோடி ரூபாய் (250 மில்லியன் டாலர்) வரை முதலீடு செய்ய தயார் என்று தெரிவித்தார்.
கும்பமேளா
இச்சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் சிக்கா, இன்போசிஸ் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் உஜ்ஜைன் பகுதியில் நடக்க இருக்கும் கும்பமேளா விழாவை சிறப்பாக விடிவைமைக்கவும், மக்களுக்கு எளிமையாக்கவும் ஒரு மென்பொருளை உருவாக்க திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா
மேலும் பிரதமர் மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா-வில் இன்போசிஸ் அளிக்க இருக்கும் பங்கிடு மற்றும் திட்டங்கள் பற்றி விஷால் சிக்கா விவரித்தார்.
தொலைதொடர்பு அமைச்சர்
சில வாரங்களுக்கு முன்பு விஷால் சிக்கா அவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றியும், மென்பொருள் துறைக்கு தனது நிறுவனம் செய்ய இருக்கும் திட்டங்கள் பற்றியும் தொலைதொடர்பு அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்து பேசினார் சிக்கா.
ஸ்மார்ட் சிட்டி
மேலும் விஷால் சிக்கா மோடி அவர்களை, இன்போசிஸ் நிறுவனத்தின் மைசூர் வளாகம் தான் நாட்டின் முதல் ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்க வேண்டினார். இதன் படி மோடி இந்த அறிவிப்பை வருகிற ஏப்ரல் மாதம் அறிவிப்பதாக தெரிவித்தார். இந்த ஸ்மார்ட் சிட்டியில் 30,000 பேர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
புதிய துறைகள்
இந்தியாவில் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial intelligence துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வருகிறார் விஷால் சிக்கா.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications