டெல்லி: இந்திய ஈ-காமர்ஸ் துறை வேகமாக வளர்ந்தலும் போலியான தள்ளுபடிகள், தரமற்ற பொருட்கள், மேசமான விநியோக பிரச்சனைகள் கொண்டுள்ளது. இதனை களையும் வகையில் இத்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை சீர்ப்படுத்த தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் உட்பட 9 அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் ஈ-காமர்ஸ் துறை வர உள்ளது, இதில் ரிசர்வ் வங்கி வடிவமைக்கப்பட்டுள்ள வரைமுறைகளும் அடங்கும்.
நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம்
இதுகுறித்து நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் அளித்த செய்தி குறிப்பில் இந்த 9 அமைச்சகமும் இத்துறையின் செயலாளர்கள் குழுவில் இருந்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையை கண்காணிக்கும் என தெரிவிக்கவிக்கப்பட்டது.
என்ன தான் பிரச்சனை??
இத்துறையில் முறையான விற்பனை உரிமம் இல்லாத காரணத்தால் யார் வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சில்லறை விற்பனையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 அமைச்சகங்கள்
மேலும் இத்துறையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளை களைந்து, வர்த்தகத்தை முறையான வகையில் செயல்படுத்தும் முறையை வடிவமைக்க உள்ளது. இதன் மூலம் இத்துறையில் நடக்கும் எல்லா விற்பனையும் அரசு கண்காணிப்பில் நடக்க விளையும்.
புகார்கள்
மேலும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் கூறுகையில் ஈ-காமர்ஸ் துறையை பற்றி பல தரப்பட்ட புகார்கள் வருவதாகவும் அதில விலை நிர்ணயம், விரி ஏய்ப்பு, ஆன்லைன் மோசடி, தகவல் பாதுகாப்பு மற்றும் அன்னிய முதலீடு போன்ற புகார்களும் அடக்கம். இதுமட்டும் அல்லாமல் இத்துறையை பற்றி சில்லறை வணிகர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
3.3 கோடி மக்கள்
இத்துறையின் மூலம் இந்தியாவில் இருக்கும் 1.1 கோடி சில்லறை வணிகம் நிறுவனங்கள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பணியாற்றும் 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications