மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நிர்வாக பொறுப்புகளில் இருந்து விட்டு வெளியேறிய பின், நிறுவனத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்ப ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம், நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்ய இந்நிறுவனத்தின் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிறுவன பங்குகளை சந்தையில் விற்க திட்டமிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஸ்பைஸ்ஜெட் தனது நிலுவை தொகையை அளிக்காத காரணத்தால் இந்நிறுவனத்தின் சேவைகள் முற்றிலும் முடங்கியது, பின்பு கேஷ் ஆண்டு கேரி முறையில் செயல்பட துவங்கியது.
மேலும் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கட்டுப்பாடு அனைத்தும் இந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 மாத காலங்களில் இந்நிறுவனம் மீண்டும் சிறப்பாக செயல்பட துவங்கும் என தெரிகிறது.
சில நாட்களுக்கும் முன்பு இந்நிறுவனம் அறிவித்த 5 இலட்ச சலுகை விலை டிக்கெட்டின் விற்பனை சிறப்பாக இருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் இந்நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை 400 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications