டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி. தேவேஷ்வர் மத்திய பட்ஜெட் குறித்து கூறுகையில், "2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டில் சிகரெட் பழக்கத்தை ஒழிக்கும் பொருட்டு அதன் மீதான வரியை அதிகரிப்பதால் கருப்பு சந்தையும், கடத்தலும் அதிகரிக்க வாய்ப்புண்டு" என தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் சிகரெட் வருவாய் டிசம்பர் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் 0.62 சதவீதம் அதிகரித்து 4,141.94 கோடி இருக்கிறது. மேலும் இது சிகரெட் மீதான வரியை அதிகரிப்பிற்கு பிறகு கிடைத்த வருவாய் என்பது குறிப்பிடதக்கது.
ஐடிசி
இந்நிறுவனம் சந்தையில் பல நுகர்வோர் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. ஐடிசி நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் 50 சதவீதம் சிகரெட் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
வரி உயர்வு
வரி உயர்வின் மூலம் சிகரெட் அல்லது புகைபிடிக்கும் பழக்கம் குறையாது, கல்ல சந்தை வழியாகவும், பிற முறைகளில் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மக்கள் ஈடுப்படுவார்கள் என தொலைகாட்சி போட்டி ஒன்றில் தேவேஷ்வர் தெரிவித்தார்.
மத்திய அரசு
மேலும் கல்ல சந்தை மற்றும் கடத்தல் அதிகரிப்பதன் மூலம் மத்திய அரசிற்கு கடுமையான வரி இழப்பு மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
பட்ஜெட்
மத்திய அரசு, நிதியமைச்சர் தலைமையில் வெளியிடும் 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிகரெட்டுக்கான வரி விதிப்பில் நிலையான நிலைய நிலவும் என தான நம்புவதாவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications